என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TVK Protest"

    • நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நமது தலைவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்.
    • ஒரு வருடத்திற்கு முன்பே இதனை தொடங்கி அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும்

    சென்னை:

    வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-

    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வாக்குரிமையை தடுப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

    நாம் நதி போல பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதில் அசிங்கமும் வரும் நல்லதும் வரும். நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நமது தலைவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்.

    நமது செயல்பாடுகள் மூலம் தி.மு.க.வினர் இன்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள். வாக்காளர் சிறப்பு திருத்தத்தை எதிர்ப்பதாக கூறும் தி.மு.க. ஏன் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவில்லை. கிராமப்புறங்களில் காலையில் வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளிகள் இரவில் தான் வீடுகளுக்கு வருவார்கள். இதுபோன்ற நபர்களிடம் எப்படி விண்ணப்பங்களை கொடுத்து பூர்த்தி செய்வது என்கிற சிக்கல்கள் உள்ளன.

    இது போன்ற அடிப்படை அறிவு இல்லாமலேயே எஸ்ஐஆர் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. நாம் இப்போது வைத்திருக்கும் வாக்காளர் அட்டை இனி செல்லுபடியாகாது. அது போன்ற சூழல் ஏற்படும்போது ஆதார் அட்டையும் செல்லுபடியாகாமல் போகலாம். பின்னர் இந்திய குடிமகனா என்று நம்மை பார்த்து கேள்வி எழுப்புவார்கள்.

    ஒரு வருடத்திற்கு முன்பே இதனை தொடங்கி அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இன்று இந்தியாவிலேயே இந்த தலைவரும் செய்யாத செயலை நேற்று வெளியிட்ட எஸ்ஐஆர் தொடர்பான வீடியோ மூலமாக நமது தலைவர் விஜய் செய்து உள்ளார்.

    நேற்று இரவு 12 மணிக்குள் மூன்று கோடி பேர் அதனை பார்த்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய வேலையை நமது தலைவர் செய்துள்ளார். எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபோதும் அவரிடம் எந்த கட்டமைப்பும் இல்லை என்றார்கள். ஆனால் அவர் மக்கள் ஆதரவை பெற்று முதலமைச்சரானார்.

    தற்போது நம்மை பார்த்தும் அதே குற்றச்சாட்டை கூறுகிறார்கள். ஆனால் நமது தலைவரோ மக்களையே கட்டமைப்பாக உருவாக்கி வைத்திருக்கிறார். இருப்பினும் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தில் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். இளம் வாக்காளர்கள் முதல் மொத்தம் உள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் வகையில் நாம் அனைவருமே வீடு வீடாக செல்ல வேண்டும்.

    இப்படி அனைவரது வாக்குரிமையையும் பெற்றுக் கொடுக்க வேண்டியது நமது கடமையாகும். இதனை நீங்கள் சரியாக செய்து விட்டாலே போதும் 2026 தேர்தலில் நமது தலைவர் தான் முதலமைச்சராக அமருவார்.

    இவ்வாறு ஆதவ் அர்ஜுனா பேசினார்.

    • வாக்காளர் சிறப்பு திருத்தத்தால் பழைய புதிய வாக்காளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
    • தி.மு.க.-பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களை மிரட்டி ஆள் மாறாட்டம் செய்து பணி செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேசியதாவது:-

    மக்களின் ஜனநாயக ஆணிவேரை அசைத்து பார்க்கும் வகையில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்தினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

    வாக்காளர்களின் பெயர்களை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் கூறி வருகிறார்கள்.போலியான காரணங்களை கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்குரிமையை நீக்கி அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.

    அதே நேரத்தில் ஒரே நபரின் பெயரை பல இடங்களில் சேர்ப்பதற்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் ஆட்சியாளர் கள் குறுக்கு வழியில் வெல்வதற்கு துடிக்கிறார்கள். வாக்காளர் சிறப்பு திருத்தத்தால் பழைய புதிய வாக்காளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். தொடர்பாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளால் முறையான பதில் அளிக்க முடியவில்லை.

    5 ஆண்டுக்கு ஒருமுறை தலைவிதியை நிர்ணயிக்கும் வாக்குகளை நாம் யாருக்கு போட வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்து வந்தார்கள். ஆனால் இன்று யார் ஓட்டு போட வேண்டும் என்பதையே அதிகார வர்க்கம் தீர்மானிக்கும் நிலை உள்ளது.

    எனவே இதனை முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும். தி.மு.க.-பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களை மிரட்டி ஆள் மாறாட்டம் செய்து பணி செய்து வருகிறார்கள். இதன் மூலமாக இளம் வாக்காளர்கள் முதல் அனைவருக்குமான வாக்குரிமையும் பறிபோகும் சூழல் உள்ளது.

    எனவே நாம் அனைவரும் வாக்குகளையும் உறுதி செய்து 2026 தேர்தலில் அனைவரும் ஓட்டு போடுவதற்கான உரிமையை பெற்றுத் தர வேண்டும். இதன் மூலம் மக்களின் ஆதரவை பெற்று 2026 தேர்தலில் நமது தலைவர் முதலமைச்சராவது உறுதி.

    இவ்வாறு ஆனந்த் பேசினார்.

    • சிவானந்தா சாலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின்பேரில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், SIR நடவடிக்கையில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையுறு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு வரும் நபர்களின் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தவேண்டும்.

    கரூரில் த.வெ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தால் நடைபெற்று வருகிற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு குளறுபடிகளை கண்டித்து கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதற்காக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் போலீஸ் அனுமதி கேட்டு கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தார்.

    இதையடுத்து 6 முக்கிய நிபந்தனைகளை விதித்து போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைப்பதற்கு அனுமதி இல்லை, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையுறு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும்.

    பள்ளி, கல்லூரி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நடத்தவேண்டும், மேலும் சிறப்பு அழைப்பாளர்கள் யாரேனும் வெளிமாவட்டத்தில் இருந்து வந்தால் தகவல் தெரிவிக்கவேண்டும்.

    ஆர்ப்பாட்டத்திற்கு வரும் நபர்களின் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் நிறுத்தவேண்டும். ஆர்ப்பாட்டத்திற்கு கூம்பு வடிவ ஒலி அமைப்புகள் பயன்படுத்கூடாது ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

    • தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின்பேரில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    சென்னை சிவானந்தா சாலையில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள் தி.நகர் க.அப்புனு, அம்பத்தூர் பால முருகன், இ.சி.ஆர்.சரவணன், பூக்கடை குமார், பழனி, கட்பீஸ் விஜய், சபரிநாதன், தாமு உள்ளிட்ட 13 மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள்கிறார்கள்.

    பின்னர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    இதே போல் தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

    • SIR-க்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். 

    அந்த வீடியோவில் விஜய் கூறியதாவது:-

    * கொஞ்சம் ஏமாந்தா.. நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போகும்.

    * வாக்காளர்கள் அனைவருக்கும் ஒரே மாதத்தில் SIR படிவம் எப்படி சென்று சேரும்?

    * SIR பணியால் அதிகம் பாதிக்கப்படப் போவது உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்கு போகும் பெண்கள்தான்.

    * FORM கொடுக்க வருவீர்கள் என்பதற்காக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டுமா?

    என்று தெரிவித்தார். 

    • சென்னையில் கட்சி ரீதியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு 13 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.
    • சென்னை சிவானந்தா சாலையில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு அனுமதி கேட்டு த.வெ.க.வில் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் போலீசாரிடம் முறைப்படி கடிதம் கொடுத்து உள்ளனர்.

    சென்னையில் கட்சி ரீதியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு 13 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    ஆனால் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த இடவசதி போதாது. எனவே அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம், சிவானந்தா சாலை ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு கூறினார்கள்.

    அதன்படி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு கொடுத்தனர். ஆனால் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.

    இதையடுத்து சென்னை சிவானந்தா சாலையில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள் தி.நகர் க.அப்புனு, அம்பத்தூர் பால முருகன், இ.சி.ஆர்.சரவணன், பூக்கடை குமார், பழனி, கட்பீஸ் விஜய், சபரிநாதன், தாமு உள்ளிட்ட 13 மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள்கிறார்கள்.

    பின்னர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதே போல் தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    • அஜித் குமார் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து த.வெ.க சென்னையில் இன்று காலை போராட்டம் நடத்துகிறது.
    • போதாது போதாது பொய் மன்னிப்பு போதாது போன்ற பதாகைகளையும் தொண்டர்கள் பிடித்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் சமீபத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் திருட்டு வழக்கு விசாரணையின் போது போலீஸ்காரர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.

    தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் கண்டன போராட்டம் நடத்தினார்கள்.

    அஜித் குமார் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் இன்று காலை போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்தில் விஜய் பங்கேற்கவுள்ள நிலையில், காலையில் இருந்தே போராட்டம் நடைபெறும் இடத்திற்கு த.வெ.க. தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    போராட்டம் நடைபெறும் இடத்தில் த.வெ.க. தொண்டர்கள் தங்களது கையில் 'Sorry வேண்டாம் நீதி வேண்டும்' என்ற பதாகை பிடித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. மேலும், போதாது போதாது பொய் மன்னிப்பு போதாது, உயிரின் மதிப்பு தெரியுமா? மன்னராட்சி புரியுமா? போன்ற பதாகைகளையும் தொண்டர்கள் பிடித்துள்ளனர்.

    முன்னதாக உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் Sorry கேட்டார். அதனை விமர்சிக்கும் வகையில் த.வெ.க. தொண்டர்கள் இந்த பதாகையை பிடித்துள்ளனர்.

    • தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.
    • பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது.

    திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்தைக் கண்டித்து த.வெ.க. சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வரவுள்ள த.வெ.க. தொண்டர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பட்டியலிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக்கண்காணிப்பின் கீழ்ச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாளை (13.07.2025) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை, சிவானந்தா சாலையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்கள், கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    ஆர்ப்பாட்டம் சரியாகக் காலை 10.00 மணிக்கு தொடங்க இருப்பதால், அதற்குத் தகுந்தார்போல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் நாம் ஒன்றுகூட வேண்டும்.

    எனவே, அனைவரும் தங்களது வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்திவிட்டு, கடற்கரை சாலை வழியாக சிவானந்தா சாலையை அடைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    2. ஆர்ப்பாட்டத்தைக் கட்டுக்கோப்பாக அமைதியான முறையில் நடத்தி, நமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசை வலியுறுத்த வேண்டும்.

    3. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வாகனங்களைக் கொண்டு வர வேண்டாம். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

    4.போக்குவரத்து விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி, போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றிச் சென்று வரும் வகையில் வழி விட்டு ஒத்துழைப்பு தந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

    5.தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.

    6.பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது.

    7.எந்த ஒரு மத, சாதி, இன மற்றும் தனிப்பட்ட நபர்களைப் புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக் கூடாது.

    8.தனிப்பட்ட அதிகாரிகள் மீதும், ஆட்சேபகரமான முறையிலும் பேசுதல் மற்றும் முழக்கங்களை எழுப்புதல் கூடாது.

    9.ஆர்ப்பாட்டத்தின் போது உருவ பொம்மைகளைக் கொண்டு வருவது. அவற்றை எரிப்பது. புகைப்படங்களை எரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

    10.ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இருப்பதால் மருத்துவமனைக்கு வந்து செல்பவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

    11.ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும்.

    12.எவ்வகையிலும் கழகத்தின் கொள்கைகள். குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராகக் கண்டிப்பாகச் செயல்படக் கூடாது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழக வெற்றிக் கழகம் மாநில அளவில் அதிகாரப் பூர்வமாக நடத்தும் முதல் கண்டனப் போராட்டம் இதுவாகும்
    • போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கேற்ப மற்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் சமீபத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் திருட்டு வழக்கு விசாரணையின் போது போலீஸ்காரர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.

    தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் கண்டன போராட்டம் நடத்தினார்கள்.

    அஜித் குமார் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்று விஜய் அறிவித்தார். ஆனால் போலீசார் அந்த போராட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்கவில்லை.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கண்டன போராட்டத்திற்கு போலீசார் தற்போது அனுமதி வழங்கி உள்ளனர். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, தூர்தர்ஷன் அலுவலகம் அமைந்துள்ள சிவானந்தா சாலை பகுதியில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதித்து உள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டத்தில் தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாளை நடக்கும் கண்டன போராட்டத்தில் விஜய் கலந்து கொள்வார் என்று தெரியவந்துள்ளது.

    விஜய் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் இருந்து தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர் கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்றே சென்னைக்கு வந்து விட்டனர். நாளை நடக்கும் போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று தெரியவந்துள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் மாநில அளவில் அதிகாரப் பூர்வமாக நடத்தும் முதல் கண்டனப் போராட்டம் இதுவாகும். இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்க உள்ளனர். போராட்டத்துக்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.

    போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கேற்ப மற்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட இருக்கிறார்கள்.

    ×