என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "volunteers protest"

    • தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.
    • பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது.

    திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்தைக் கண்டித்து த.வெ.க. சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வரவுள்ள த.வெ.க. தொண்டர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பட்டியலிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக்கண்காணிப்பின் கீழ்ச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாளை (13.07.2025) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை, சிவானந்தா சாலையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்கள், கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    ஆர்ப்பாட்டம் சரியாகக் காலை 10.00 மணிக்கு தொடங்க இருப்பதால், அதற்குத் தகுந்தார்போல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் நாம் ஒன்றுகூட வேண்டும்.

    எனவே, அனைவரும் தங்களது வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்திவிட்டு, கடற்கரை சாலை வழியாக சிவானந்தா சாலையை அடைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    2. ஆர்ப்பாட்டத்தைக் கட்டுக்கோப்பாக அமைதியான முறையில் நடத்தி, நமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசை வலியுறுத்த வேண்டும்.

    3. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வாகனங்களைக் கொண்டு வர வேண்டாம். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

    4.போக்குவரத்து விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி, போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றிச் சென்று வரும் வகையில் வழி விட்டு ஒத்துழைப்பு தந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

    5.தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.

    6.பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது.

    7.எந்த ஒரு மத, சாதி, இன மற்றும் தனிப்பட்ட நபர்களைப் புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக் கூடாது.

    8.தனிப்பட்ட அதிகாரிகள் மீதும், ஆட்சேபகரமான முறையிலும் பேசுதல் மற்றும் முழக்கங்களை எழுப்புதல் கூடாது.

    9.ஆர்ப்பாட்டத்தின் போது உருவ பொம்மைகளைக் கொண்டு வருவது. அவற்றை எரிப்பது. புகைப்படங்களை எரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

    10.ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இருப்பதால் மருத்துவமனைக்கு வந்து செல்பவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

    11.ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும்.

    12.எவ்வகையிலும் கழகத்தின் கொள்கைகள். குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராகக் கண்டிப்பாகச் செயல்படக் கூடாது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சீமானிடம் சுமார் 75 நிமிடம் விசாரணை நடந்தது.
    • என்னிடம் அதே பழைய கேள்விகள் தான் கேட்கப்பட்டன என்றார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் 75 நிமிடம் விசாரணை நடந்தது. அதன்பின், சீமான் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.

    அப்போது அங்கு காத்திருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது வேண்டாத வேலை. வீட்டில் ஒட்டிய சம்மனை கிழிக்கக் கூடாது என சட்டம் உள்ளதா?

    கடந்த ஆண்டு 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் கேட்கப்பட்ட அதே கேள்விகள் இந்த முறையும் கேட்கப்பட்டது.

    புதிய கேள்விகள் ஒன்றுமில்லை. என்னிடம் அதே பழைய கேள்விகள் தான் கேட்கப்பட்டன.

    காவல் நிலையத்திற்கு தாமதமாக வர போலீசாரே காரணம்.

    முதல்வர் உரையாற்றிக் கொண்டிருந்ததால் என்னை விசாரணைக்கு அழைக்க தாமதித்தனர்.

    பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைதுசெய்ய தி.க.விடம் இருந்து தமிழக அரசுக்கு அழுத்தம் சென்றுள்ளது.

    என்னை முதல்வராக்காமல் ஓயமாட்டார்கள்.

    பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? விரும்பி பாலியல் உறவு வைத்துக்கொண்டவர் நடிகை தான். நடிகையுடன் ஏற்பட்ட உறவு திருமணம் என்ற நிலைக்கு வரவில்லை. நடிகையுடன் 6 அல்லது 7 மாதங்கள் தான் பழக்கம் இருந்தது.

    கஷ்டத்தில் இருந்த போது நடிகையால் எனக்கு எப்படி ரூ 60 லட்சம் தர முடியும்? நடிகை என்னை காதலித்திருந்தால் இப்படி முச்சந்திக்கு வந்திருக்க மாட்டார். நடிகை வைத்திருந்தது காதல் அல்ல, கண்றாவி.

    விஜயகாந்த் போன்று எனக்கு சினிமா பின்புலம் இல்லை, ஆனால் மக்கள் என்னை அங்கீகரித்திருக்கிறார்கள்.

    மாண்புமிகு ஸ்டாலின் அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    பேட்டி முடிந்ததும் காரில் வீடு புறப்பட்ட சீமான், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தபடி சென்றார்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை மாற்றக்கோரி சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. #Congress
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை மாற்றக்கோரி சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



    தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறது. இங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜெயக்குமார் நிறுத்தப்பட்டு உள்ளார்.

    இதற்கிடையே, சென்னை காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று தொண்டர்கள் கூடினர். 

    அவர்கள் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது தொண்டர்கள் இருவர் தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #Congress
    ×