என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவெக போராட்டம்"

    • அஜித் குமார் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து த.வெ.க சென்னையில் இன்று காலை போராட்டம் நடத்துகிறது.
    • போதாது போதாது பொய் மன்னிப்பு போதாது போன்ற பதாகைகளையும் தொண்டர்கள் பிடித்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் சமீபத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் திருட்டு வழக்கு விசாரணையின் போது போலீஸ்காரர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.

    தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் கண்டன போராட்டம் நடத்தினார்கள்.

    அஜித் குமார் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் இன்று காலை போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்தில் விஜய் பங்கேற்கவுள்ள நிலையில், காலையில் இருந்தே போராட்டம் நடைபெறும் இடத்திற்கு த.வெ.க. தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    போராட்டம் நடைபெறும் இடத்தில் த.வெ.க. தொண்டர்கள் தங்களது கையில் 'Sorry வேண்டாம் நீதி வேண்டும்' என்ற பதாகை பிடித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. மேலும், போதாது போதாது பொய் மன்னிப்பு போதாது, உயிரின் மதிப்பு தெரியுமா? மன்னராட்சி புரியுமா? போன்ற பதாகைகளையும் தொண்டர்கள் பிடித்துள்ளனர்.

    முன்னதாக உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் Sorry கேட்டார். அதனை விமர்சிக்கும் வகையில் த.வெ.க. தொண்டர்கள் இந்த பதாகையை பிடித்துள்ளனர்.

    • தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.
    • பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது.

    திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்தைக் கண்டித்து த.வெ.க. சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வரவுள்ள த.வெ.க. தொண்டர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பட்டியலிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக்கண்காணிப்பின் கீழ்ச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாளை (13.07.2025) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை, சிவானந்தா சாலையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்கள், கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    ஆர்ப்பாட்டம் சரியாகக் காலை 10.00 மணிக்கு தொடங்க இருப்பதால், அதற்குத் தகுந்தார்போல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் நாம் ஒன்றுகூட வேண்டும்.

    எனவே, அனைவரும் தங்களது வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்திவிட்டு, கடற்கரை சாலை வழியாக சிவானந்தா சாலையை அடைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    2. ஆர்ப்பாட்டத்தைக் கட்டுக்கோப்பாக அமைதியான முறையில் நடத்தி, நமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசை வலியுறுத்த வேண்டும்.

    3. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வாகனங்களைக் கொண்டு வர வேண்டாம். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

    4.போக்குவரத்து விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி, போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றிச் சென்று வரும் வகையில் வழி விட்டு ஒத்துழைப்பு தந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

    5.தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.

    6.பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது.

    7.எந்த ஒரு மத, சாதி, இன மற்றும் தனிப்பட்ட நபர்களைப் புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக் கூடாது.

    8.தனிப்பட்ட அதிகாரிகள் மீதும், ஆட்சேபகரமான முறையிலும் பேசுதல் மற்றும் முழக்கங்களை எழுப்புதல் கூடாது.

    9.ஆர்ப்பாட்டத்தின் போது உருவ பொம்மைகளைக் கொண்டு வருவது. அவற்றை எரிப்பது. புகைப்படங்களை எரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

    10.ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இருப்பதால் மருத்துவமனைக்கு வந்து செல்பவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

    11.ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும்.

    12.எவ்வகையிலும் கழகத்தின் கொள்கைகள். குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராகக் கண்டிப்பாகச் செயல்படக் கூடாது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழக வெற்றிக் கழகம் மாநில அளவில் அதிகாரப் பூர்வமாக நடத்தும் முதல் கண்டனப் போராட்டம் இதுவாகும்
    • போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கேற்ப மற்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் சமீபத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் திருட்டு வழக்கு விசாரணையின் போது போலீஸ்காரர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.

    தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் கண்டன போராட்டம் நடத்தினார்கள்.

    அஜித் குமார் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்று விஜய் அறிவித்தார். ஆனால் போலீசார் அந்த போராட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்கவில்லை.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கண்டன போராட்டத்திற்கு போலீசார் தற்போது அனுமதி வழங்கி உள்ளனர். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, தூர்தர்ஷன் அலுவலகம் அமைந்துள்ள சிவானந்தா சாலை பகுதியில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதித்து உள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டத்தில் தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நாளை நடக்கும் கண்டன போராட்டத்தில் விஜய் கலந்து கொள்வார் என்று தெரியவந்துள்ளது.

    விஜய் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    தமிழ்நாடு முழுவதும் இருந்து தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர் கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்றே சென்னைக்கு வந்து விட்டனர். நாளை நடக்கும் போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று தெரியவந்துள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் மாநில அளவில் அதிகாரப் பூர்வமாக நடத்தும் முதல் கண்டனப் போராட்டம் இதுவாகும். இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்க உள்ளனர். போராட்டத்துக்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.

    போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கேற்ப மற்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட இருக்கிறார்கள்.

    ×