search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் முதியவர் உள்பட 2 பேர் சாவு
    X

    சேலத்தில் முதியவர் உள்பட 2 பேர் சாவு

    • சேலம் லீ பஜார் மேம்பாலம் கீழே உள்ள ரெயில்வே பாலத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 22-ந்தேதி இறந்து கிடந்தார்.
    • இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் லீ பஜார் மேம்பாலம் கீழே உள்ள ரெயில்வே பாலத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 22-ந்தேதி இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் புளூ கலர் சட்ைட, கிரே கலர் கருப்பு பார்டர் வேட்டி அணிந்திருந்தார்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் கடந்த 23-ந்தேதி பள்ளப்பட்டி மெய்யனூர் சாலை முனியப்பன் கோவில் ஆட்டோ நிலையம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதை அறிந்த பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இவர் பச்சை கலர் அரை கை சட்டை, சாம்பல் கலர் பேண்ட் அணிந்திருந்தார். வலது நெற்றியில் வெட்டு காய தழும்பு காணப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்ததில் இறந்த 2 பேருடைய பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? மற்றும் உறவினர்கள் குறித்த விபரம் தெரியவில்லை.

    இதனால் உடலை ஒப்படைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. தொடர்ந்து ேபாலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×