search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attempted arson"

    • வழக்கு விசாரணையை முடிப்பதில் தாமதப்படுத்தி வருவதால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
    • கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வீராணம் கிராமத்தில் ஊத்துமலை செல்லும் சாலையில் வசித்து வருபவர் சுப்பையா. இவரது மகன் தமிழ்வாணன் (வயது 35).

    இவருக்கு மகேஸ்வரி (31) என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும், 7 மாத ஆண் குழந்தையும் உள்ளது. தமிழ்வாணன் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்தபோது லாரியில் இருந்து கெமிக்கலை இறக்கி கொண்டிருந்தபோது அவரது உடலில் கெமிக்கல் பட்டு காயம் அடைந்தார்.

    இதையடுத்து அவரால் மேற்கொண்டு லாரி ஓட்டும் தொழிலை செய்ய முடியவில்லை. இதனால் தமிழ்வாணன் விபத்து இழப்பீடு கேட்டு தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது வழக்கு முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனாலும் அதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் வழக்கை விரைந்து விசாரித்து இழப்பீடு வழங்குமாறு தமிழ்வாணன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

    இந்நிலையில் இன்று வழக்கு தொடர்பான விசாரணைக்காக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் தமிழ்வாணன் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அவர் வக்கீல்கள் செல்லும் நுழைவு வாயில் வழியாக கோர்ட்டுக்குள் வந்துள்ளார்.

    பின்னர் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோலை மறைத்து எடுத்து வந்த அவர் தனது 2 குழந்தைகளையும் ஓரமாக உட்கார வைத்து விட்டு கோர்ட்டு வளாகத்தில் மனைவியுடன் பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் வக்கீல்கள் பார்த்து ஓடி வந்து 2 பேர் மீதும் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். அப்போது அவர், நான் வேலைக்கு செல்ல முடியாததால் ரூ.6 லட்சம் வரை கடனாளியாக உள்ளேன். வழக்கு விசாரணையை முடிப்பதில் தாமதப்படுத்தி வருவதால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

    பின்னர் அவர்களை குழந்தைகளுடன் அழைத்துச் சென்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • நாராயணன் (வயது 77). இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
    • நுழைவு வாயிலில் வைத்து திடீரென பெட்ரோலை எடுத்து தலையில்ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பல்பாக்கி பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 77). இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். நுழைவு வாயிலில் வைத்து திடீரென பெட்ரோலை எடுத்து தலையில்ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரை தடுத்து தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர்.

    இதுகுறித்து தீக்குளிக்க முயன்ற முதியவர் நாராயணன் கூறியதாவது:-

    எனக்கு முனியப்பன் மற்றும் அமிர் தலிங்கம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் முனியப்பன் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் எனக்கு சொந்தமான 1.38 ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்டார். இது குறித்து எனது மகனிடம் கேட்டபோது என்னை திட்டி வெளியேற்றுகிறார். வயதான நான் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வந்தேன். இதனால் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்வதை விட அனாதையாக இருக்கும் எனக்கு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து இறந்து விடலாம் என நினைத்து தீக்குளிக்க முயற்சி செய்தேன். மாவட்ட நிர்வாகம் என் மகன் மீது நடவடிக்கை எடுத்து வாழ வழிவகை செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து முதியவரை டவுன் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
    • போலீசார் தண்ணீரை ஊற்றி சமரசம் செய்தனர்

    வேலூர்:

    குடியாத்தம்- காட்பாடி சாலையில் உள்ள கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 45) இவரது மகன்கள் பரத் (23) மணிகண்டன் (20).

    செல்வி இன்று தனது மகன்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தார்.

    கூட்டம் நடைபெரும் காயிதே மில்லத் அரங்கம் வெளியே திடீரென பரத் செல்வி ஆகியோர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். அப்போது பெண் போலீசார் ஒருவர் தவறி கீழே விழுந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக செல்வியின் இடது காதுடன் கம்மல் அறுந்து கீழே விழுந்தது. தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சமரசம் செய்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    நாங்கள் வசித்து வந்த வீட்டின் அருகே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் எங்கள் இடத்தில் சுவரை எழுப்பினர். இதனால் நாங்கள் அவதிப்பட்டோம்.

    அருகே இருந்த கோவில் நிலத்தை பயன்படுத்தி வந்தோம். கோவில் சார்பில் அந்த நிலத்தை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கின்றனர்.

    இதனால் எங்களுக்கு பாதையில்லாத நிலை உள்ளது. நாங்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சுவரை இடித்து அகற்ற வேண்டும். எங்களுக்கு பாதை அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    வாலிபரின் பெற்றோர், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள பாலூர் நடுக்காலனியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26). இவருக்கும் நத்தப்பட்டு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.நட்பாக பழகிய இவர்கள், நாளடைவில் நெருங்கி பழகியுள்ளனர். அப்போது அந்த வாலிபர், வினோத்குமாரிடம் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினால் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.இதை நம்பிய வினோத்குமார் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறினார். மேலும் தனது பெயரையும், காதலன் விருப்பத்திற்கு ஏற்ப வினோதினி என மாற்றிக் கொண்டார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு பாலூரில் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே கடந்த சில நாட்களாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த வாலிபர், வினோதினியுடன் குடும்பம் நடத்த மறுத்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.மேலும் வாலிபரின் பெற்றோர், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த வினோதினி, அந்த வாலிபரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, பாலூர் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளார்.

    இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் இருதரப்பினரையும் கடந்த மாதம் 3-ந் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன் பேரில் வினோதினி, ஊர் பஞ்சாயத்துக்கு புறப்பட்ட போது அந்த வாலிபரின் உறவினர்கள் அவரை தடுத்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றார். இதுதொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் வினோதினியின் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.இதனால் பாதிக்கப்பட்ட வினோதினி, கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இது பற்றி அறிந்த புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவகுமார் (47), மாற்றுத்திறனாளி. இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.
    • அப்போது அவர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றினார். இதை பார்த்த பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் மணியனூர் திருவேங்கட நகரை சேர்ந்தவர் சிவகுமார் (47), மாற்றுத்திறனாளி. இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றினார். இதை பார்த்த பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கூறுகையில், கடந்த 26-ந் தேதி எனது வீட்டிற்குள் புகுந்து 3 பேர் என்னை தாக்கினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • சடையப்பன் குடும்பத்தினர் உள்பட 10 பேர் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தனர்.
    • சடையப்பன் தான் மறைத்து வைத்து எடுத்து வந்த 3 லிட்டர் மண்எண்ணையை தலையில் ஊற்ற முயன்றார். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சடையப்பன் (வயது 38). இவரது மனைவி தெய்வானை (35). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    தீக்குளிக்க முயற்சி

    இந்த நிலையில் சடையப்பன் குடும்பத்தினர் உள்பட 10 பேர் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தனர். அப்போது சடையப்பன் தான் மறைத்து வைத்து எடுத்து வந்த 3 லிட்டர் மண்எண்ணையை தலையில் ஊற்ற முயன்றார். இதனை போலீசார் தடுத்து நிறுத்தினர் .

    அப்போது சடையப்ப னின் தங்கை சடையம்மாள் (32) திடீரென பிளேடால் கையை அறுத்தார். இத

    னால் பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு அழைத்து செல்ல முயன்றனர் . ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்தார். இைதயடுத்து போலீசார் அவரை சென்று வாகனத்தில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர் . தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சடையப்பன் கூறுகையில், தங்களது வீட்டின் அருகில் அரசு சார்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது . இது தங்களுக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கா ததால் மன வேதனையில் உள்ளோம். எனவே கலெக்டர் தலையிட்டு இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், என்றார்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்றார்.
    • போலீசார் மாற்றுத்திறனாளி பெண்ணை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவ லகத்தில் வாரந் தோறும் திங்கட்கிழமை களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகி றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டரிடம் நேரடியா கவோ, மனுக்கள் மூலமா கவோ தெரிவிப்பார்கள்.

    அதன்படி இன்று கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் ஏராள மானோர் மனு கொடுக்க நீண்ட வரிசையில் காத்தி ருந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதை பார்த்த பொது மக்கள் மற்றும் போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இது தொடர்பாக போலீசார் மாற்றுத்திறனாளி பெண்ணை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி னர்.

    அப்போது அவர் பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த சிறுமணி மகள் கவிதா, மாற்றுத்திறனாளி என தெரியவந்தது. இவரது குடும்பத்தினர், அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் நடத்தி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக ரூ.4 லட்சம் அபராதம் கட்டவில்லையென்றால் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக மிரட்டுகின்றனர். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

    கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மகாலட்சுமி (வயது 46). இவர் நேற்று பகல் 1 மணியளவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
    • அங்கு அலுவலகத்தின் முன்பு நின்ற அவர் திடீரென தனது கட்டைப்பையில் வைத்திருந்த கேனில் உள்ள பெட்ரோலை எடுத்து தலை மற்றும் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் கடந்த 17 ஆண்டுகளாக துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வருபவர் மகாலட்சுமி (வயது 46). இவர் நேற்று பகல் 1 மணியளவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அலுவலகத்தின் முன்பு நின்ற அவர் திடீரென தனது கட்டைப்பையில் வைத்திருந்த கேனில் உள்ள பெட்ரோலை எடுத்து தலை மற்றும் உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஓடி வந்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி நனைத்தபடியால் உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள தாரமங்கலம் நங்கவள்ளி மெயின் ரோட்டில் உருண்டு விழுந்து கதறி துடித்துள்ளார்.

    இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கவுன்சிலர் சின்னுசாமி. செல்வமணி ஆகியோர் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா, துப்புரவு ஆய்வாளர் கோபிநாத் ஆகியோரிடம் மகாலட்சுமிக்கு ஆதரவாக விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

    அப்போது அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுத பெண் ஊழியர் மகாலட்சுமி கூறியதாவது:- நகராட்சியில் பணிபுரியும் சக துப்புரவு ஊழியர் ஒருவர் தான் அதிகாரி போல் நடந்து கொண்டு என்னை ஒருமையில் திட்டி வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடுவதும்,என்னை அலுவலகத்திற்கு வெளியில் நிறுத்தியும் கொடுமை படுத்துகிறார். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறியும் எனக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

    இதையடுத்து பெண் ஊழியரை மீட்டு தாரமங்கலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தரமாங்கலம் நகராட்சியில் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மகாலட்சுமி புகார் கூறிய சக துப்புரவு ஊழியரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தீக்குளிக்க முயன்ற தந்தை-மகன் மீது வழக்குப்பதியப்பட்டது.
    • புதுக்குளம் கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் புகார் செய்தார்.

    விருதுநகர்

    திருச்சுழி தாலுகா பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தெய்வசிகாமணி. நரிக்குடி-திருப்புவனம் மாநில ெநடுஞ்சாலையை ஆக்கிரமித்து இவர்கள் வீடு, கடை கட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் வீடு, கடையை அகற்ற உத்தரவிடப்பட்டது. அதன்படி மதுரை ெநடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் சங்கர் தலைமையில் ஊழியர்கள் கட்டிடத்தை இடிக்க வந்தனர். அப்போது தந்தையும்-மகனும் பெட்ரோலை தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    அங்கிருந்த ேபாலீசார் உடனடியாக தடுத்து அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் ஊழியர்கள் வீடு, கடையை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த நிலையில் அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து மாரியப்பன், தெய்வசிகாமணி தீக்குளிக்க முயன்றது தொடர்பாக ஏ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புதுக்குளம் கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தங்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
    • சரவணனின் மனைவி சென்றபோது, அங்குள்ள ஒரு சிலர் நீயும் உனது கணவரும் ஊருக்குள் வரக்கூடாது. இதனை மீறி வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். இன்று காலை மாற்றுத்திறனாளி இளைஞருடன் அவரது குடும்பத்தினர் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தங்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

    அங்கு இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர்களிடம் இருந்த கேனை பிடுங்கினர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பண்ருட்டி அடுத்த வீரசிங்கன்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது தாய், மனைவி, மாற்றுத்திறனாளி மகன், சிறுவன் உள்பட 5 பேர் வந்திருந்தது தெரிய வந்தது.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக சரவணன் வீட்டையும், காரையும் அடித்து உடைத்து தீ வைத்து கொளுத்தி விட்டனர். மேலும் இந்த ஊருக்குள் வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தும், பல்வேறு கட்ட போராட்டம் நடத்திய பிறகு, சம்பந்தப்பட்ட ராஜ்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் வீரசிங்ககுப்பத்திற்கு சரவணனின் மனைவி சென்றபோது, அங்குள்ள ஒரு சிலர் நீயும் உனது கணவரும் ஊருக்குள் வரக்கூடாது. இதனை மீறி வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுக்க போலீசார் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி சரவணன், நாங்கள் ஊருக்கு செல்லும் போது மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி மனு கொடுத்தார். கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மகனுடன் குடும்பத்தினர் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அசல் ஆவணங்களை பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக கூறியதின் பேரில் அருள் மற்றும் கீர்த்தனா ஆகியோர் அங்கிருந்து சென்றனர்

    பெரம்பலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, கல்லூரை சேர்ந்தவர் அருள் (வயது 36). இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெரம்பலூர் நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள தனியார் நிதி நிறுவன வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூ.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், அருள் தனது வீட்டு கடனை அசல் மற்றும் வட்டியுடன் முழுவதுமாக கடந்த மாதம் செலுத்திவிட்டு தனது அசல் ஆவணங்களை கேட்டுள்ளார். ஆனால், நிதி நிறுவன வங்கி மேலாளர் உள்ளிட்டோர் அசல் ஆவணங்களை வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர்.

    இதனால் மன உளைச்சல் அடைந்த அருள், தனது மனைவி கீர்த்தனாவுடன் (30) சம்பந்தப்பட்ட நிதி நிறுவன வங்கி முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்கு பெட்ரோலுடன் வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அசல் ஆவணங்களை பெற்றுத்தர ஏற்பாடு செய்வதாக கூறியதின் பேரில் அருள் மற்றும் கீர்த்தனா ஆகியோர் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மனைவி, மகனை கண்டுபிடித்து தரக்கோரிக்கை
    • நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

    பேரணாம்பட்டு அடுத்த கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி என்பவர் மனு அளிக்க வந்திருந்தார். அவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி அளித்தனர். வாலிபர் தீ குளிக்க முயன்ற சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து ராஜீவ் காந்தி கூறுகையில்:-

    எனது மனைவி சகுந்தலா (வயது 32 ), மகன் புகழ் ஆகியோர் கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டனர். அவர்களை மீட்டு தரக்கோரி பேரணாம்பட்டு போலீசில் புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன் என கூறினார். இதனையடுத்து அவரை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அழைத்து சென்றனர். அவர் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    ×