search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில்குடும்பத்துடன் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
    X

    தீக்குளிக்க முயன்ற கணவன்-மனைவி.

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில்குடும்பத்துடன் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

    • பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருபா(வயது 24). இவர் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
    • கடனைப் பெற்றுக் கொண்டு அவர்கள் இதுவரை பணம் செலுத்தாமல் கொலை மிரட்டல் விடுத்தனர்.

    சேலம்:

    சேலம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருபா(வயது 24). இவர் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா(20). இவர்கள் தங்களது 2 குழந்தைகளுடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தார். அப்போது மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அம்மாபேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிருபா கூறும் போது, என்னுடன் வேலை பார்த்து வரும் 3 பேருக்கு 7 லட்சம் ரூபாய் வேறொரு நபரிடம் வாங்கித் தந்தேன். ஆனால் கடனைப் பெற்றுக் கொண்டு அவர்கள் இதுவரை பணம் செலுத்தாமல் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 3 பேர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்றார்.

    Next Story
    ×