என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் மகனுடன் தீக்குளிக்க முயற்சி
- போலீசார் தடுத்து நிறுத்தினர்
- கணவர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவல கத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட் டம் நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் மனு அளிக்க வருபவர் களை தீவிர சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்த னர்.
அப்போதுநுழைவு வாயில் அருகில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அவரது மகனுடன் வந்து திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்கமுயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தண்டராம்பட்டு எடத்தனூர் பகுதியை சேர்ந்த காமாட்சி என்றும், அவரது கணவர் சென்ன கிருஷ்ணன் குடும்பம் நடத்த சம்பள பணம் கொடுக்காமல் அடித்து கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக வும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்