search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐ.எப்.எஸ். ஏஜென்டு வீட்டின் முன்பு முதலீட்டாளர்கள் தீக்குளிக்க முயற்சி
    X

    ஐ.எப்.எஸ். ஏஜென்டு வீட்டின் முன்பு முதலீட்டாளர்கள் தீக்குளிக்க முயற்சி

    • போலீசார் பேச்சுவார்த்தை
    • மோசடி செய்தவர் வீட்டின் முன்பு பொதுமக்கள் குவிந்தனர்

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமை இடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் கிளை அலுவலகங்களை ஆரம்பித்து கடந்த சில ஆண்டுகளாக ஐஎப்எஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

    ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதிக வட்டி தருவதாக கூறி ஆசை காட்டி பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்தது. இதுதொடர்பாக பொரு ளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து பலரை கைது செய்தனர்.

    முக்கிய நிர்வாகிகள் இதுநாள் வரை தலைமறைவாக உள்ளனர்.

    இந்நிலையில் ராணிப் பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட பனப் பாக்கம், மேலபுலம், சயனபுரம், அசநெல்லிகுப்பம், கீழ்வெங்கடா புரம், சேந்தமங்கலம், நாகவேடு உள்ளிட்ட பகுதிகளில் பல நபர் கள் ஐஎப்எஸ் சப் ஏஜன்ட்களாக செயல்பட்டு பலகோடி ரூபாயை பொதுமக்களிடம் வசூல் செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நெமிலி ஆற்றோர தெரு பகுதியை சேர்ந்த ஐஎப்எஸ் ஏஜன்டு ஜெகந்நாதன் (36) என்பவரை மோசடி வழக் கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணையில் உள்ள நிலையில் ஜெகந்நாதன் ஜாமீனில் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நேற்று அவர் நெமிலியில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு வந்ததாக தகவல் பரவிய நிலையில், சுற்றியுள்ள கிராமப்பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் ஜெகந்நாதன் வீட்டின் முன்பு குவிந்தனர்.

    அப்போது ஆவேச மடைந்த சயனபுரம் பகுதியை சேர்ந்த மோகன்(35), தீரன்(33) ஆகியோர் திடீரென தங்கள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தனர்.

    அங்கிருந்தவர்கள் தடுத்து நெமிலி போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற 2 பேர் மீது தண்ணீர் ஊற்றி அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தைக்குப்பின் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் ஏஜன்டு வீட்டின்முன்பு 2 வாலிபர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×