என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒரே தட்டில் உணவருந்தும் நாய்-பூனை
- ஒரே தட்டில் சாப்பிடும் போது பூனைக்கு நாய் விட்டுக் கொடுக்கிறது.
- பூனையும், நாயும் ஒற்றுமையாக திகழ்வதை பார்க்கும் போது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
பெருமாநல்லூர் :
ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன்பாளையம் சிவசக்தி நகரில் ஒரு வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளான பூனையும், நாயும் ஒற்றுமையாக திகழ்வதை பார்க்கும் போது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது .
இந்த பூனையும் நாயும் ஒரே தட்டில் தான் உணவு அருந்துகிறது. வேறு ஒரு நாய் தட்டில் சாப்பிட வரும்போது இந்த நாய்க்கு பிடிப்பதில்லை. ஆனால் ஒரே தட்டில் சாப்பிடும் போது பூனைக்கு நாய் விட்டுக் கொடுக்கிறது. பொதுவாக பூனையை கண்டால் நாய்க்கு பிடிப்பதில்லை. ஆனால் இந்த வீட்டில் இந்த அதிசயம் நிகழ்வதை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது.
இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளர் கோனியா கூறும் போது, நாங்கள் சிறு வயது முதல் நாயையும் பூனையையும் ஒன்றாக தான் வளர்த்து வருகிறோம். நாய்க்குட்டியாக இருக்கும் போது பூனை அதன் மேல் படுத்து தூங்கும் . அப்போதே அவர்கள் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுப்பதில்லை. அது இன்றுவரை தொடர்கிறது. பொதுவாக எந்த நாயும் தான் உணவருந்தும் போது வேறொரு நாயோ மற்ற விலங்கோ நெருங்கும்போது அதை சும்மா விடுவதில்லை, துரத்தும். ஆனால் இந்த நாயின் குணம் பிரமிக்க வைக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்