search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் அருகே 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு சிக்கியது
    X

    குலசேகரம் அருகே 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு சிக்கியது

    • 10 அடி நீளம் உள்ள மலைபாம்பு ஒன்று பூனை ஒன்றை கடித்து கவ்வி கொண்டு இருந்தது.
    • தீயணைப்பு துறையினர் மலைபாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே வெண்டலிகோடு பம்பச்சை தாழவிளை பகுதியில் கால்வாய் ஒன்று பாய்கிறது. நேற்று மாலை அந்த பகுதியில் சுமார் 10 அடி நீளம் உள்ள மலைபாம்பு ஒன்று பூனை ஒன்றை கடித்து கவ்வி கொண்டு இருந்தது.

    இது அந்த பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரின் பூனை என்று தெரியவந்தது. உடனே அந்த பகுதி மக்கள் குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு அலுவலர் செல்வமுருகன் தீயணைப்பு வீரர்களுடன் வந்து பார்க்கும்போது பாம்பு பூனையை கடித்து கொண்டு இருந்தது. அவர்கள் பாம்பின் பிடியில் இருந்து பூனையை விடுவித்தனர். பூனை இறந்தது தெரியவந்தது. உடனே தீயணைப்பு துறையினர் மலைபாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மலைபாம்பை பேச்சிப்பாறை அடர்ந்த காட்டு பகுதியில் விடுவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுத்தனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×