VIDEO: விநாயகர் சிலையின் கைகளில் அமைதியாக தூங்கிய பூனை

விநாயகர் சிலைகளுக்காக அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டு சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.விநாயகர் சிலை ஒன்றின் கையில் பூனை ஒன்று அமைதியாக படுத்து தூங்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
VIDEO: விநாயகர் சிலையின் கைகளில் அமைதியாக தூங்கிய பூனை
Published on

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, நாக்பூர், நாசிக் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டன.

மேலும் விநாயகர் சிலைகளுக்காக அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டு சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் உள்ள விநாயகர் சிலை ஒன்றின் கையில் பூனை ஒன்று அமைதியாக படுத்து தூங்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், விநாயகர் சிலையின் கையில் பூனை தூங்கும் காட்சிகள் உள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், சகோதரர் பாதுகாப்பான கைகளில் இருக்கிறார் என பதிவிட்டார். மற்றொருவர், அவர்கள் ஆறுதல் இருக்கும் இடத்தில் குடியேறுகிறார்கள் என பதிவிட்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com