search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yamuna River"

    • டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 206.44 மீட்டராக உயர்ந்துள்ளது.
    • வெள்ளப்பெருக்கால் யமுனை பழைய பாலத்தை கடக்கும் ரெயில்கள்.

    டெல்லி, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    டெல்லியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் மழை பெய்தது. இதனால் வெள்ளம் குறைந்திருந்த யமுனை ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிகரித்தது. இதனால், யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டியது.

    அதன்படி, நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.34 மீட்டர் ஆக இருந்தது. இது இரவு 11 மணியளவில் 205.45 மீட்டராக உயர்ந்தது.

    இதற்கிடையே, உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால் யமுனை ஆற்றில் நீர்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில், டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 206.44 மீட்டராக உயர்ந்துள்ளது.

    வெள்ளப்பெருக்கால் யமுனை பழைய பாலத்தை கடக்கும் ரெயில்கள் புதுடெல்லி வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • நேற்று மாலை 6 மணி நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.34 மீட்டர் ஆக உள்ளது.
    • உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    டெல்லி, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    இந்நிலையில் டெல்லியில் நேற்று மீண்டும் மழை பெய்தது. இதனால் வெள்ளம் குறைந்திருந்த யமுனை ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிகரித்தது.

    இதனால், யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டியுள்ளது.

    அதன்படி, நேற்று மாலை 6 மணி நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.34 மீட்டர் ஆக உள்ளது. இது இரவு 11 மணியளவில் 205.45 மீட்டராக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே, உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் ஜூலை 22 (இன்று) வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    • கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
    • வீடுகளை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 41 ஆயிரம் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    புதுடெல்லி:

    டெல்லி, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

    இந்நிலையில் டெல்லியில் நேற்று மீண்டும் மழை பெய்தது. இதனால் வெள்ளம் குறைந்திருந்த யமுனை ஆற்றில் மீண்டும் தண்ணீர் அதிகரித்தது. நேற்று இரவு யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி நீர்மட்டம் 206.01 மீட்டராக அதிகரித்தது. இதனால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று காலை இது 205.45 மீட்டர் அளவில் நீர்வரத்து குறைந்தது. இருந்த போதிலும் யமுனையில் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

    டெல்லி நகரில் 25 சதவீதம் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    வீடுகளை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 41 ஆயிரம் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையில் உத்தர காண்ட், இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மேலும் 5 நாட்கள் கனமழை. மற்றும் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்கனவே வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • யமுனா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் டெல்லி நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
    • தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மக்கள் செல்ல வேண்டாம். தயவு செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி ஒருவருக்கொருவர் உதவுங்கள்.

    புதுடெல்லி:

    பருவமழை காரணமாக வட மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இமாச்சலபிரதேசம், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    இங்கு பெய்த கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் வரலாறு காணாத மழை கொட்டியது. யமுனா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் டெல்லி நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    டெல்லியின் ஐ.டி. 3 மற்றும் ராஜ்காட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் தண்ணீரில் மூழ்கியதால் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் படை வரவழைக்கப்பட்டது. ஹனுமான் மந்தர், யமுனா பஜார், சீதா காலனி, சிவில் லைன்ஸ்களுக்கு வெளியே உள்ள சாலைகளிலும் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் யமுனா ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறியதாவது:-

    யமுனை நதிநீர் மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது. கனமழை பெய்யாவிட்டால் நிலைமை விரைவில் சீராகும். வஜிராபாத் மற்றும் சந்திரவால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மக்கள் செல்ல வேண்டாம். தயவு செய்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி ஒருவருக்கொருவர் உதவுங்கள்.

    இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    யமுனை நதியில் இன்னும் 205.33 மீட்டர் அபாய அளவை விட 2 மீட்டருக்கு மேல் செல்கிறது. வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி நீர் மட்டம் 208.66 ஆக இருந்தது. இன்று காலை 7 மணி நிலவரப்படி நீர் மட்டம் 207.62 ஆக குறைந்துள்ளது.

    இதற்கிடையே டெல்லியில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

    • யமுனா நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் டெல்லிக்குள் புகுந்து அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்தது.
    • உத்தரபிரதேசத்தில் பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் டெல்லி, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன.

    இமாச்சலபிரதேசத்தில் இருந்து அதிக அளவில் வெளியேறிய தண்ணீர் அரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையை அடைந்தது. அங்கிருந்து யமுனா நதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் யமுனா நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் டெல்லிக்குள் புகுந்து அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்தது. சாலைகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

    குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. ஏற்கனவே டெல்லியில் ஒரே நாளில் 15 செ.மீ. மழை பெய்திருந்த நிலையில் யமுனா நதி வெள்ளமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கார், பஸ் என பல வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    சுத்திகரிப்பு நிலையங்களில் வெள்ளம் புகுந்ததால் அணைகள் மூடப்பட்டன. இதனால் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    தொடர் கன மழை காரணமாக யமுனா ஆற்றின் நீர் மட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயந்ந்தது. நேற்று பகல் 1 மணிக்கு 208.62 மீட்டராக அதிகரித்தது. ஆற்றின் நீர் மட்டம் அபாய கட்டத்தை தாண்டி சென்றதால் பெரும் வெள்ளம் டெல்லிக்குள் புகுந்தது.

    இந்த நிலையில் யமுனா ஆற்றுக்கு வரும் நீர் வரத்து சற்று குறைந்துள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு ஆற்றின் நீர் மட்டம் 208.62 மீட்டர் அளவிலேயே இருந்தது. நீர் மட்டம் உயராததால் இனிமேல் குறைய தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து மத்திய நீர் ஆணைய இயக்குனர் ஷரத் சந்திரா கூறும்போது, அரியானா மாநிலத்தில் உள்ள ஹத்னி குண்ட் தடுப்பணைக்கு நீர்வரத்து நேற்று மாலை 4 மணிக்கு 80 ஆயிரம் கன அடியாக குறைந்தது. யமுனா ஆற்றில் நீர் மட்டம் சீராகி விட்டது. இன்று ஆற்றின் நீர் மட்டம் 208.45 மீட்டராக குறையும் என்று எதிர் பார்க்கப்படு கிறது என்றார்.

    யமுனா ஆற்றின் நீர் மட்டம் நேற்று இரவு நிலையான அளவு வந்து குறைய தொடங்கி இருந்தாலும் அபாய கட்டத்தை விட மூன்று மீட்டர் உயரத்தில் தண்ணீர் இன்னும் பாய்கிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    யமுனா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி சென்ற தண்ணீரின் அளவு குறைய தொடங்கியுள்ளதால் டெல்லியில் வெள்ளம் வடிகிறது.

    அதே வேளையில் டெல்லி முழுவதும் வெள்ள காடாக இருப்பதால் தண்ணீர் வடிய சில நாட்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் நாளை மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வட மாநிலங்களில் கன மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றுக்கு மேலும் 34 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் 17 பேர் பலியானார்கள். இமாச்சலபிரதே சத்தில் 6 பேர், அரியானாவில் 5 பேர் பஞ்சாப்பில் 4 பேர், உத்தரகாண்ட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

    ஒட்டு மொத்தமாக வட மாநிலங்களில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. இதில் இமாசல பிரதேசத்தில் அதிகமானோர் பலியாகி இருக்கிறார்கள். அங்கு பல இடங்களில் வெள்ளம் புகுந்தது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

    உத்தரபிரதேசத்தில் பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது. கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தும் இமாசலபிரதேச மாநிலத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அங்கு லஹவுல் ஸ்பிதி மற்றும் கின்னார் மாவட்டங்களில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் 1000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    • யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, அருகிலுள்ள கிராமங்களில் வெள்ள அபாயம் உள்ளதால் மக்கள் மீட்பு.
    • கிராம பகுதிக்கு சென்று மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற உத்தரவிட்டனர்.

    டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. யமுனை ஆற்றின் நீர் வெளியேறி சாலைகளுக்கு வரும் புகைப்படங்களும் வெளியேறி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல், அரியானா மாநிலம் பரீதாபாத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அபாயத்தைத் தொடர்ந்து யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் வசிக்கும் குறைந்தது 90 பேரை காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெளியேற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அமிபூர் கிராமத்தில் வசிப்பவர்கள் மற்றும் அங்குள்ள பண்ணைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    யமுனை ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, அருகிலுள்ள கிராமங்களில் வெள்ள அபாயம் உள்ளதால், இந்த மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வருவதற்காக, பரிதாபாத் காவல்துறையுடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மீட்புப் பணியில் ஈடுபட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் சுபே சிங் கூறினார்.

    மேலும், பரிதாபாத் துணை கமிஷனர் விக்ரம் சிங் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் (மத்திய) பூஜா வசிஷ்ட், மாவட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து, கிராம பகுதிக்கு சென்று மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற உத்தரவிட்டனர்.

    • யமுனை ஆற்றில் இருந்து வெள்ளநீர் வெளியேறாமல் இருக்க தடுப்புகள் அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • யமுனை ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி.

    டெல்லியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால், சாலை எங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    டெல்லி யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    யமுனை ஆற்றில் இருந்து வெள்ளநீர் வெளியேறாமல் இருக்க தடுப்புகள் அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி, யமுனை ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது வரை நிலைமை கட்டுக்குள் இருப்பதாக டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.

    அதிகமாக கரைபுரண்டு ஓடும் யமுனை ஆற்று நீர் டெல்லி நகருக்குள் புகும் அபாயம் இருப்பதால் அம்மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். #Yamunariver
    புதுடெல்லி:

    நாட்டில் முக்கிய நதிகளில் ஒன்றான யமுனை ஆறு இமயமலையில் உற்பத்தியாகி அரியானா டெல்லி மாநிலங்கள் வழியாக ஓடி உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை நதியுடன் கலக்கிறது.

    யமுனை நதியில் மழை காலங்களில் அதிக அளவில் வெள்ளம் வருவது உண்டு. தற்போது இமயமலை பகுதியிலும் இதன் நீர்பிடிப்பு பகுதியான வட மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் யமுனை ஆற்றில் அதிக அளவில் வெள்ளம் வந்து கொண்டு இருக்கிறது. யமுனை ஆற்றின் குறுக்கே அரியானா மாநிலத்தில் ஹதினிகுண்ட் என்ற இடத்தில் அணை உள்ளது.

    இந்த அணை ஏற்கனவே நிரம்பி அபாய கட்டத்தை தாண்டி இருந்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் யமுனை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக யமுனை ஆற்றில் ஏற்கனவே வெள்ளம் அதிகமாக வந்தது. டெல்லியில் பழைய ரெயில்வே பாலம் அகலமான பகுதி ஆகும். இங்கு 204.92 மீட்டர் அகலத்துக்கு தண்ணீர் சென்றாலே ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக அர்த்தம்.

    ஆனால், நேற்று இரவு 9 மணியளவில் 205.36 மீட்டர் அகலத்துக்கு தண்ணீர் சென்றது. இதனால் யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது.


    இந்த நிலையில் ஹதினி குண்ட் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் அணையில் இருந்து 4 லட்சத்து 92 ஆயிரத்து 351 கன அடி தண்ணீர் நேற்று இரவு 9 மணி அளவில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று இரவு டெல்லியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே அபாய கட்டத்தை தாண்டி யமுனை ஆற்றில் வெள்ளம் செல்லும் நிலையில் இப்போது மேலும் அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால் யமுனை ஆற்று நீர் டெல்லி நகருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எனவே, வெள்ளத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில், ராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், டெல்லி நகர வளர்ச்சி அதிகாரிகள், வெள்ள கட்டுப்பாட்டுத்துறை, நீர்ப்பாசன அதிகாரிகள் பொதுப்பணித்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    அதில், வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்று ஆலோசிக்கப்பட்டது. மீட்பு குழுவினரை தயாராக வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

    யமுனை ஆற்றின் அருகில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் உணவு, சுகாதார உதவிகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    தேவையான இடங்களில் மோட்டார் படகுகளை தயார் நிலையில் வைத்து உடனடி மீட்பு பணிகளை செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. #Yamunariverdangermark #Yamunariver
    அரியானா, உ.பி.யில் பெய்த கனமழை காரணமாக யமுனை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு பாய்கிறது. டெல்லி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Yamunariverdangermark #Yamunariver
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டும் மழைசார்ந்த விபத்துகளில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இன்று காலை சுமார் 11 மணியளவில் அரியானாவில் உள்ள ஹத்தினி குன்ட் மதகில் இருந்து வினாடிக்கு 3,11,190 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதன் எதிரொலியாக டெல்லியில் ஓடும் யமுனை ஆற்றில் நீர்மட்டம் மெல்லமெல்ல உயர்ந்து, அபாயகட்டத்தை எட்டியுள்ளது.


    குறிப்பாக, காஷ்மீரே கேட் பகுதியில் உள்ள பழைய ரெயில்வே இரும்பு பாலத்தை யமுனை நீர் தொட்டுச் செல்கிறது. நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கிழக்கு டெல்லி கோட்ட துணை உயரதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.


    அவசர காலத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்த 43 படகுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. #Yamunariverdangermark  #Yamunariver
    2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குள் கங்கை, யமுனை நதிகள் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு விடும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறியுள்ளார். #NitinGadkari
    புதுடெல்லி:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது, கங்கை, யமுனை நதிகள் தூய்மை ஆக்கப்படும் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரி கூறியதாவது:

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கையின் படி, இந்தியாவின் மிகவும் முக்கிய நதிகளான கங்கை, யமுனை நதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது.

    மேலும் 20 சதவீத பணிகள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிவடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கங்கை மற்றும் யமுனை நதிகளின் கிளை நதிகளையும் தூய்மை படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்குள் பணிகள் முழுவதும் முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #NitinGadkari #YamunaRiver #GangaRiver
    ×