என் மலர்
இந்தியா

யமுனை நதியை தூய்மை செய்யும் பணிகளை தொடங்கியது பா.ஜ.க.
- டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 27 ஆண்டுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது.
- யமுனை நதியை சுத்தம் செய்வோம் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது.
புதுடெல்லி:
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் 27 ஆண்டுக்குப் பிறகு வெற்றிபெற்று பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் யமுனை நதியை சுத்தம் செய்வோம் என வாக்குறுதி அளித்த பா.ஜ.க. டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ளது.
இந்நிலையில், யமுனை நதியை சுத்தம் செய்யும் பணியை டெல்லி பா.ஜ.க. அரசு தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி கவர்னர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
யமுனை நதியை தூய்மை செய்யும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. நீரில் மிதக்கும் குப்பைகள், ஆக்கிரமிப்பு செடிகளை அகற்றவும், நீர்நிலைகளின் அடிப்பகுதி மண்ணை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
டெல்லி தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்த துணைநிலை கவர்னர் சக்சேனா உடனே யமுனை நதியை தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்க உத்தரவிட்டிருந்தார் என தெரிவித்துள்ளது.
Next Story






