search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே  பெரிய ஏரியில்  தண்ணீரை வெளியேற்றி மீன் பிடிக்கும் கும்பல்
    X

    பிரிதிவிமங்கலம் பெரிய ஏரியில் தண்ணீரை வெளியேற்றும் பகுதியை படத்தில் காணலாம்.

    தியாகதுருகம் அருகே பெரிய ஏரியில் தண்ணீரை வெளியேற்றி மீன் பிடிக்கும் கும்பல்

    • தியாகதுருகம் அருகே பெரிய ஏரியில் தண்ணீரை வெளியேற்றி மீன் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • குத்தகைக்கு எடுத்தவர் மீன்களை வளர்த்து பராமரித்து வந்தார். தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே பிரதிவிமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் சுமார் 250 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவிலான நிலத்திற்கு தண்ணீர் பாசனம் செய்யப்படுகிறது. இந்த ஏரியில் மீன் வளர்க்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது. அதன்படி குத்தகைக்கு எடுத்தவர் மீன்களை வளர்த்து பராமரித்து வந்தார். தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் தியாகதுருகம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பல்லகச்சேரி ஏரியிலிருந்து பிரதிவிமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. இதனால் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்த–தால் மீன் பிடிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

    எனவே ஏரி கரையில் தற்போது உள்ள ஒரு மதுவில் தண்ணீரை திறந்து விட்டும், மற்றொரு இடத்தில் புதியதாக மது கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் வழியாக இரவு நேரங்களில் ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றியும் மீன்களை பிடித்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவ்வாறு மீன்பிடிப்பதற்க்காக தண்ணீர் திறந்து விடுவதால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்படும் எனவும். மேலும் இவ்வாறு வெளி–யேறும் தண்ணீர் தற்போது கரும்பு பயிர்களில் தேங்கி கிடப்பதால் கரும்பு பயிர் வீணாகும் நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி மீன் பிடிக்க தடை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×