search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரியகோவில் அணை நீர்மட்டம் 33.20 அடியாக உயர்வு
    X

    பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோவில் அணையின் தோற்றம்.

    கரியகோவில் அணை நீர்மட்டம் 33.20 அடியாக உயர்வு

    • கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோவில் அணை அமைந்துள்ளது.
    • 3,600 ஏக்கர் விளைநிலங்கள் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன்மலை அடிவாரம் பாப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோவில் அணை அமைந்துள்ளது.

    இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. ஏ.குமாரபாளையம், கல்யா ணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக் கன்பாளையம் பகுதியில் 2,000 ஏக்கர் பழைய ஆயக்கட்டு நேரடி பாசனம் பெறுகின்றன.

    சுற்றுப்புற கிராமங்க ளுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த பருவ மழையால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபர் 25-ந் தேதி 50.52 அடியை எட்டி நிரம்பியது. 175.63 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியதும் உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

    இதனையடுத்து நடப்பாண்டு மார்ச் மாதத்தில் இருந்து சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஜூன் மாத இறுதியில் நீர்மட்டம் 31 அடியாக குறைந்து 68 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே மீதமிருந்தது. சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தால் அக்டோபர் 1-ல் நீர்மட்டம் 18.37 அடியாக குறைந்தது. 27.10 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருந்தது.

    நீர்மட்டம் 33.20 அடியாக உயர்வு

    இந்த நிலையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் தற்போது 33.20 அடியாக உயர்ந்துள்ளது. 76.17 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 25-ந்தேதி அணை நிரம்பி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு நவம்பர் மாதம் 18-ந்தேதி வரை அணை நிரம்பவில்லை.

    இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் நவம்பர் இறுதிக்குள் பருவ மழை கை கொடுக்கும் என்பதால் அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் கரியக்கோ வில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்புமென விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×