என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 332484
நீங்கள் தேடியது "கோடைமழை"
கள்ளக்கிணறு பகுதிகளில் அமைத்த இரும்பு பாலம் போல் தங்கள் பகுதியிலும் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை, பாரதிஅண்ணாநகர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் பொருட்களை தலைச்சுமையாக சுமந்து பெரியாற்றை கடந்து வருகின்றனர். கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்றும் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது. இதனால் பெரியாற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
விவசாயிகள் விளைபொருட்களை தலைச்சுமையாக ஆற்றை கடந்து செல்கின்றனர். தற்போது அதிகளவு தண்ணீர் வருவதால் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமம் அடைகின்றனர். கள்ளக்கிணறு பகுதிகளில் அமைத்த இரும்பு பாலம் போல் தங்கள் பகுதியிலும் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை பெய்யும் பொழுது ஆபத்தான முறையிலேயே ஆற்றை கடந்து வருவதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டாட்சியர் முருகேசனிடம் கேட்டபோது இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என்றார்.
நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மரம் முறிந்து விழுந்ததால் காம்பவுண்டு சுவர் சேதமடைந்தது. இதேபோல் போலீஸ் நிலையத்திலும் மரங்கள் சாய்ந்து விழுந்தது.
நிலக்கோட்டை:
கோடைவெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நிலக்கோட்டை பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. துள்ளுப்பட்டியில் முனியம்மாள் என்பவர் வீடு மீது வேப்பமரம் சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மரம் முறிந்து விழுந்ததால் காம்பவுண்டு சுவர் சேதமடைந்தது. இதேபோல் போலீஸ் நிலையத்திலும் மரங்கள் சாய்ந்து விழுந்தது. கோடைமழை குளிர்ச்சியை ஏற்படுத்திய போதிலும் இப்பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கொைடக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று பெய்த மழை கோடைவிழாவை வரவேற்கும் வண்ணம் இருந்தது. மதியம் சாரலாக தொடங்கிய மழை 4 மணிநேரம் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. இதனை ஊழியர்கள் சீரமைத்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X