என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sankaraparani River"

    • சங்கராபரணி ஆற்றில் செல்லும் நீர் காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
    • செஞ்சி பகுதியிலுள்ள ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால் 2,411 கன அடி நீர் சங்கராபரணி ஆற்றில் நிமிடத்திற்கு செல்கிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் வெள்ள நீர் சூழ்ந்து ஆர்ப்பரித்து செல்கின்றன.

    சங்கராபரணி ஆற்றில் செல்லும் வெள்ள நீரால் நெடிமோழியனூரில் உள்ள கலிங்கல் பகுதியில் ஆற்றின் நடுவே செல்லும் நீர் அருவி போல் கொட்டி செல்வதால் திண்டிவனம், விக்கிரவாண்டியை சேர்ந்த மக்கள் அந்த பகுதிகளுக்கு சென்று குளித்தும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    செஞ்சியில் உருவாகும் இந்த ஆறானது வீடுர் வழியாக சென்று புதுச்சேரியில் கடலில் கலக்கின்றன. செஞ்சி பகுதியிலுள்ள ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால் 2,411 கன அடி நீர் சங்கராபரணி ஆற்றில் நிமிடத்திற்கு செல்கிறது.

    சங்கராபரணி ஆற்றில் செல்லும் நீர் காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதே போன்று தென்பெண்ணை ஆற்றில் செல்லும் வெள்ள நீரால் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு பகுதியில் இருகரைகளையும் சூழ்ந்து ஆர்பரித்து செல்லும் வெள்ள நீரை காண பொதுமக்கள் வந்து அணைக்கட்டு மேல் நின்று செல்பி எடுத்து செல்கின்றனர்.

    • நோணாங்குப்பத்தின் ஆற்றின் இருகரையோரங்களில் இருப்பவர்களுக்கு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • ஆற்றில் இறங்குவது மீன்பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்பி எடுப்பது போன்ற எந்தவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடூர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி 28 அடியை எட்டியது. மேலும் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையொட்டி சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மணலிப்பட்டு, கொடாத்தூர், செட்டிப் பட்டு, கூனிச்சம்பட்டு, சுத்துக்கேணி, கைக்கிலப்பட்டு, தேத்தாம்பாக்கம், குமாரப்பாளையம், வம்புப்பட்டு, செல்லிப்பட்டு, பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம் (கோனேரிக்குப்பம்), வில்லியனூர் (ஆரியப்பாளையம், புதுநகர் பிளாட்-2) பொறையாத்தமன் நகர், கோட்டைமேடு, மங்கலம், உறுவையாறு, திருக்காஞ்சி, ஒதியம்பட்டு மற்றும் புதுச்சேரி தாலுகாவில் இருக்கும் என்.ஆர்.நகர், நோணாங்குப்பத்தின் ஆற்றின் இருகரையோரங்களில் இருப்பவர்களுக்கு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நேரத்தில் ஆற்றில் இறங்குவது மீன்பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்பி எடுப்பது போன்ற எந்தவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் செல்லிப்பட்டு படுகை அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    திருக்கனூர்:

    திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு கிராமத்தில் பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த படுகை அணை உள்ளது. இந்த அணையில் நடுப் பகுதி சேதமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைத்தனர். இருப்பினும் தொடர்ந்து சேதம் அடைந்து வருகிறது.

    இதனை சரிசெய்ய வேண்டும் எனவும், அணையை பாதுகாக்க வேண்டும் என்றும் பலமுறை அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் கற்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு அணை உடைந்தால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது. எனவே அணையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தொடர் மழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    அரியாங்குப்பம்:

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக புதுச்சேரி-கடலூர் சாலையில் அரியாங்குப்பம் போலீஸ்நிலையம் அருகே சாலையின் இரு புறங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

    தொடர் மழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தில் கட்டப்பட்டுள்ள படுகை அணை நிரம்பி வழிகிறது.
    ×