search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
    X
    சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    தொடர் மழை எதிரொலி- சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    தொடர் மழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    அரியாங்குப்பம்:

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக புதுச்சேரி-கடலூர் சாலையில் அரியாங்குப்பம் போலீஸ்நிலையம் அருகே சாலையின் இரு புறங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

    தொடர் மழை மற்றும் வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தில் கட்டப்பட்டுள்ள படுகை அணை நிரம்பி வழிகிறது.
    Next Story
    ×