என் மலர்
நீங்கள் தேடியது "உடுமலை பஞ்சலிங்க அருவி"
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
- சுற்றுலா பயணிகள் இன்று அருவியில் குளிக்க வந்திருந்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று அருவியில் குளிக்க வந்திருந்தனர். தடை காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்து சென்றனர். தண்ணீர் வரத்து சீரானதும் மீண்டும் அருவியில் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோடையிலும் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலையில் குவிந்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க சுவாமி கோவில், பஞ்சலிங்க அருவி மற்றும் மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பஞ்சலிங்க அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோடையிலும் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலையில் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து, அருவியில் குளித்து வருகின்றனர்.
- சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
- ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒருசேர ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
கோவிலுக்கு வருகின்ற வழியில் படகு இல்லம், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்திஅணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.அவற்றை பார்வையிடவும் அணைப் பகுதியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழவும் மலைமீது உள்ள பஞ்சலிங்க அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காகவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்தனர்.
பின்னர் அருவிக்கு சென்று குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.அதைத் தொடர்ந்து அடிவாரப் பகுதிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிச் சென்றனர். மழை பொழிவுக்கு பின்பு அருவியில் சீரான முறையில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.