என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடுமலை பஞ்சலிங்க அருவி"

    • சுற்றுலா வருவோர் கோவிலை ஒட்டி மலைப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
    • இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பில் அருவியிலும், வழித்தடத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. சிறந்த சுற்றுலா தலமான இப்பகுதியில் திருமூர்த்தி அணை, மீன் காட்சியகம், பஞ்சலிங்கம் அருவி, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 கடவுள்களும் ஒரே சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

    பண்டிகை நாட்கள், விடுமுறை தினங்களில் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா வருவோர் கோவிலை ஒட்டி மலைப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

    இந்தநிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் லேசான தொடர் மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்திருப்பதால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பில் அருவியிலும், வழித்தடத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் இன்று காலை அருவியில் குளிக்க சென்ற ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். 

    • நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளதால் 2 நாட்களுக்கு பிறகு இன்று அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவை முக்கிய சுற்றுலாத்தலங்களாக உள்ளது. தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் அருவியில் குளிக்க வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அருவிக்கு சென்று குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    இந்நிலையில் இன்று மழைப்பொழிவு குறைந்து பஞ்சலிங்க அருவியின் நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளதால் 2 நாட்களுக்கு பிறகு இன்று அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். 

    • உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
    • கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்கிருந்து சுமார் 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.

    இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று அருவி பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அருவியை மூழ்கடித்தப்படி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.

    காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில், கன்னிமார் கோவில், மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை தண்ணீர் சூழ்ந்தது. கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. இன்றும் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    கடந்த 3 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து 12 ஆயிரம் கன அடி உபரிநீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்தால் கூடுதலாக உபரி நீர் திறப்பதற்கும் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

    இதனால் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளான உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், அரவக்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும் உடுமலையின் சுற்றுப்புற பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் முற்றிலுமாக குறைந்து குளுகுளு காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • அருவியின் நீர் வரத்தை கோவில் நிர்வாகிகள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்யவும், மலை மீதுள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் இன்று காலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு சென்றனர். அருவியின் நீர் வரத்தை கோவில் நிர்வாகிகள் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
    • சுற்றுலா பயணிகள் இன்று அருவியில் குளிக்க வந்திருந்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று அருவியில் குளிக்க வந்திருந்தனர். தடை காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்து சென்றனர். தண்ணீர் வரத்து சீரானதும் மீண்டும் அருவியில் சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் குளிக்க அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கோடையிலும் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலையில் குவிந்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க சுவாமி கோவில், பஞ்சலிங்க அருவி மற்றும் மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பஞ்சலிங்க அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோடையிலும் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலையில் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து, அருவியில் குளித்து வருகின்றனர்.

    • சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
    • ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒருசேர ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    கோவிலுக்கு வருகின்ற வழியில் படகு இல்லம், சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்திஅணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.அவற்றை பார்வையிடவும் அணைப் பகுதியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழவும் மலைமீது உள்ள பஞ்சலிங்க அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காகவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.

    இதனால் உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்தனர்.

    பின்னர் அருவிக்கு சென்று குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.அதைத் தொடர்ந்து அடிவாரப் பகுதிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிச் சென்றனர். மழை பொழிவுக்கு பின்பு அருவியில் சீரான முறையில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. 

    ×