என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான் கனமழை"

    • 1,200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

    ஆப்கானிஸ்தானின் ஹெராத், கந்தஹார், ஹெல்மண்ட் உள்ளிட்ட பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் அங்கு திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஹெராத் மாகாணத்தின் கப்கான் மாவட்டத்தில் ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். 1,200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. கனமழை-வெள்ளம் காரணமாக நாட்டின் மத்திய, வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் முழுவதும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளன என்று ஆப்கானிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது யூசுப் ஹம்மாத் தெரிவித்தார்.

      காபூல்:

      ஆப்கானிஸ்தானில் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.

      இதனால் காணும் இடமெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக பாக்லான், கோர், ஹெராத் ஆகிய மாகாணங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

      இதன் காரணமாக அங்குள்ள 4 பள்ளிக்கூடங்கள், மசூதி உள்பட ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

      மேலும் சுமார் 2 ஆயிரம் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே மீட்பு படையினர் அங்கு களத்தில் இறங்கி உள்ளனர்.

      வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களை அவர்கள் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர். இதற்காக பல தற்காலிக நிவாரண முகாம்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளன.

      இந்த வெள்ளப்பெருக்கில் ஏராளமானோர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

      ×