search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    அ.தி.மு.க. வேட்பாளர்களை நாளை அறிவிக்க முடிவு?

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    சென்னை:

    பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 2 பேரை தேர்வு செய்ய முடியும். இந்த 2 பதவிகளுக்கும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.

    சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா உள்பட பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    2 எம்.பி. வேட்பாளர்களை தேர்வு செய்ய இதுவரை அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. தென்மாவட்டத்தை சேர்ந்தவருக்கு பதவியை கொடுக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மேல்சபை எம்.பி. தேர்தல் வேட்பாளர் போட்டி சுமூக முடிவு எட்டப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே நாளை அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×