என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » dharmapuri job fraud
நீங்கள் தேடியது "Dharmapuri job fraud"
தருமபுரியில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நிலஅளவையர் அலுவலக உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #Jobfraud
தருமபுரி:
தருமபுரி மாவட்ட நில அளவையர் அலுவலகத்தில் ஸ்ரீராம் (வயது 37) என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கோவிந்தராஜ் என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் பெற்றார். ஆனால் ஸ்ரீராம் பணத்தை பெற்று கொண்டு இதுவரை கோவிந்தராஜூக்கு வேலையும் வாங்கியும் தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்தார்.
இதுகுறித்து கோவிந்தராஜ் நிலஅளவை உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தார். இந்த மனுமீது துறை சார்பில் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் நிலஅளவை ஆய்வாளர் சிவக்குமார் நேற்று ஸ்ரீராமிடம் விசாரணை நடத்த அலுவலகத்துக்கு வருமாறு கூறினார்.
அப்போது அங்கு வந்த ஸ்ரீராம் அதிகாரியின் முன்பு தனது மோட்டார் சைக்கிளின் சாவியையும், விஷம் பாட்டிலும், கடிதம் ஒன்றும் வைத்து விட்டு எந்தபதிலும் கூறாமல் சென்றுவிட்டார்.
இதனால் பதறிபோன சிவக்குமார், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சென்ற ஸ்ரீராம் மீது தருமபுரி டவுன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராமை தேடிவருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X