என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foxconn"

    • Foxconn நிறுவனம், அத்தகைய முதலீடு குறித்த பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
    • நேற்று அம்பலப்பட்டுள்ள இந்த பொய் என்பது, பொய்களே உருவான இந்த விடியா ஆட்சி விரைவில் அம்பலப்பட்டு வீழப் போவதற்கு சாட்சி!

    அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    #Foxconn நிறுவனம், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு நடத்தியதாகவும், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாகவும் திமுக அரசு அறிவித்தது. பொம்மை முதல்வரோ, இது தான் "செயலில் ஸ்டாலின் மாடல்" என்று மார்தட்டிக் கொண்டார்.

    இந்நிலையில், #Foxconn நிறுவனம், அத்தகைய முதலீடு குறித்த பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

    "பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க" என்ற ஸ்டாலினின் பொன்மொழியை, அவருக்கே நினைவுபடுத்த விழைகிறோம்.

    ஏனெனில், பொருத்தமற்ற பொய்கள் இப்படி தான் சீக்கிரமே அம்பலப்பட்டுப் போகும்.

    ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா செல்லும் பொம்மை முதல்வர், அதனால் தமிழகத்திற்கு கிடைத்தது என்னவென்று கேட்டால், அதற்கு இவர்களின் பதில், "வெற்று பேப்பர்"! அது சரி, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?

    நேற்று அம்பலப்பட்டுள்ள இந்த பொய் என்பது, பொய்களே உருவான இந்த விடியா ஆட்சி விரைவில் அம்பலப்பட்டு வீழப் போவதற்கு சாட்சி!

    கூகுள் நிறுவனம் கூட, பல்லாயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று அறிவித்துள்ளது. ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத, திறமையற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்டு, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் வளமான தமிழ்நாட்டைக் கட்டமைக்க ஒரே வழி, 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைவதே!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தன்னுடைய ஐபோன் உற்பத்தி ஆலையை நிறுவி செயல்படுத்தி வருகிறது.
    • ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உறுதிமொழியை அளித்துள்ளது.

    தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ச்சியாக பல்வேறு முதலீடுகளை ஈர்த்த வண்ணம் இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் முதலீட்டாளர்கள் மாநாடு, அனைத்து மாவட்டங்களிலும் டைடல் பூங்காக்கள் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தன்னுடைய ஐபோன் உற்பத்தி ஆலையை நிறுவி செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படக்கூடிய ஐபோன்கள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன.

    அந்த வகையில் அடுத்த கட்டமாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் ரூ.15,000 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. சென்னை அருகே மிகப்பெரிய ஆலையையை அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் தொழிற்சாலை தொடங்கப்பட்டால், 14,000 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஃபாக்ஸ்கான் இந்தியாவின் பிரதிநிதி ராபர்ட் வூ இதனை உறுதி செய்துள்ளார்.

     

    இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,

    தமிழ்நாட்டின் பொறியியல் மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தித் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமளிக்கும் வகையில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உறுதிமொழியை அளித்துள்ளது.

    ரூ.15,000 கோடி முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • வேதாந்தாவுடன் இணைந்து குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்க கூட்டு ஒப்பந்தம் செய்திருந்தது.
    • இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி குறித்த தனது லட்சியங்களை இந்த முடிவு மாற்றாது என பாக்ஸ்கான் கூறியுள்ளது.

    மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள உற்பத்தி நிறுவனம் தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான். இந்நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் தயாரிக்க தேவையான முக்கிய உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது.

    இந்நிறுவனம் இந்தியாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவுடன் குஜராத் மாநிலத்தில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி செய்வதற்கு தொழிற்சாலை அமைக்க ரூ.16,000 கோடி மதிப்பிற்கு ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்திருந்தது.

    தற்போது இந்த ஒப்பந்தப்படி செயல்பட இயலாது என கூறி அந்நிறுவனம் விலகியுள்ளது.

    "பரஸ்பர ஒப்பந்தம் மூலம் முடிவு எடுக்கப்பட்டு, வேதாந்தாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி குறித்த தனது லட்சியங்களை இந்த முடிவு மாற்றாது" என கூறியுள்ளது.

    இது குறித்து வேதாந்தா தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.

    இந்தியாவை உலகளாவிய, உயர் தொழில்நுட்ப உற்பத்தி சக்தியாக மாற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியங்களுக்கு இந்த நடவடிக்கை பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    வேதாந்தாவுடனான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த தொழிற்சாலை வந்திருந்தால், இது மிகப்பெரிய ஒன்றாக இருந்திருக்கும்.

    இந்தியாவில் தெலுங்கானாவிலும் பெங்களூரூவிலும் தலா ஒன்று என இந்தியா முழுவதும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார பதட்டங்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்க நிறுவனங்கள், தங்களுக்கு உதிரிபாகங்கள் வழங்கும் நிறுவனங்களை சீனாவிற்கு வெளியே தொழிற்சாலைகளை அமைக்குமாறு வலியுறுத்தி வருகின்றன.

    அமெரிக்காவின் ஆப்பிள், சீனாவின் கம்யூனிஸ்ட் ஆட்சிமுறை குறித்து பொதுவெளியில் நல்ல முறையில் கருத்துக்கள் கூறினாலும், தங்களுக்கு உதிரி பாகங்கள் வழங்கும் ஃபாக்ஸ்கான் உட்பட அனைத்து உற்பத்தியாளர்களிடமும் தங்கள் எதிர்கால உற்பத்தியின் வினியோக சங்கிலி பாதிக்காத வகையில் சீனாவிலிருந்து வெளியேற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

    ஃபாக்ஸ்கானின் முடிவு இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை இலக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

    • ஐபோன் 15 சீரிசில் மொத்தமாக நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
    • ஐபோன் 15 சீரிசில் டைனமிக் ஐலேன்ட் அம்சம், மெல்லிய டிசைன், பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

    இந்தியாவில் புதிய ஐபோன்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், ஆப்பிள் இன்க் நிறுவனம் ஐபோன் 15 மாடல்களை தமிழ் நாட்டில் உற்பத்தி செய்ய துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழும ஆலையில் முற்றிலும் புதிய ஐபோன் மாடல்களின் உற்பத்தி நடைபெற இருக்கிறது.

    தற்போது உற்பத்திக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. சீனாவில் உள்ள ஆலையில் இருந்து வினியோகம் துவங்கிய பிறகு தான், தமிழகத்தில் இருந்து புதிய யூனிட்கள் அனுப்பப்பட உள்ளன. புதிய ஐபோன் மாடல்கள் செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப்பெரும் அப்டேட் ஆக பார்க்கப்படுகிறது.

     

    இந்தியாவில் உற்பத்தி செய்யும் போது, அவற்றுக்கான உபகரணங்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்படும். இதற்காக சென்னையில் உள்ள உற்பத்தி ஆலை தயார்நிலையில் உள்ளது. ஐபோன் 15 சீரிசில், ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ பிளஸ் என நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய ஐபோன் 15 சீரிசில் டைனமிக் ஐலேன்ட் அம்சம், மெல்லிய டிசைன், பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று தெரிகிறது. ஐபோன் 15 ப்ரோ சீரிசில் ஏ17 பயோனிக் சிப்செட், ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் குறைந்தபட்ச ஸ்டோரேஜ் 256 ஜிபி-யாக உயர்த்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்நிறுவனத்தை தொடங்கிய கவ், 2019ல் தலைமை பதவியை துறந்தார்
    • இதுவரை அரசியலில் அவரால் பெரும் வெற்றி பெற முடியவில்லை

    அமெரிக்காவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள், அதன் பிரபலமான ஐபோனை தயாரிக்க உலகெங்கும் பல நிறுவனங்களை ஒப்பந்ததாரர்களாக நியமித்துள்ளது. இவற்றில் முன்னணியில் இருப்பது சீனாவிலும், தைவான் நாட்டிலும் உள்ள தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹோன் ஹாய் பிரஸிஷன் நிறுவனம்.

    உலகெங்கிலும் இந்நிறுவனம், ஃபாக்ஸ்கான் எனும் பெயரில் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

    மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான ஃபாக்ஸ்கான், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மட்டுமல்லாது, அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் கிண்டில் எனப்படும் மின்னணு புத்தகம், ஜப்பான் நாட்டின் நிண்டென்டோ வீடியோ கேம் உட்பட உலகின் பல நிறுவனங்களுக்கு மின்னணு பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறது.

    இந்நிறுவனத்தை டெர்ரி கவ் எனும் தைவான் நாட்டின் கோடீசுவரர் 1974ல் தொடங்கினார். தனது உழைப்பால், முன்னணி நிறுவனமாக இதனை முன்னேற்றிய கவ், 2019ல் தனது தலைமை பதவியை துறந்தார். இவருக்கு தற்போதைய வயது 72. அதற்கு பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த போதிலும் அவரால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.

    இந்நிலையில், வரும் 2024 ஜனவரி மாதம் தைவான் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் எந்க கட்சியையும் சாராத சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாக கவ் அறிவித்துள்ளர்.

    தைவானின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் 2022 ஆம் ஆண்டு 6வது இடத்தை பிடித்த டெர்ரி கவ், பல தசாப்தங்களாக பொது வெளியில் தனது கருத்துக்களை அஞ்சாமல் கூறும் வழக்கம் கொண்டவராக கருதப்படுகிறார்.

    வெற்றி பெறுவதற்காக தனது தேர்தல் அறிக்கையில் அவர் கூறப்போகும் திட்டங்களை குறித்து யூகங்கள் இப்போதே சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

    • காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது.
    • உதிரிபாகங்களை கொண்டு ஐபோன் செல்போன்களை தயாரித்து வருகிறது.

    தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் உதிரி பாகங்களை கொண்டு ஐ-போன் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளது.

    இந்த நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பாக விளம்பரம் செய்துள்ளது. அப்போது திருமணம் ஆன இரண்டு பெண்கள் வேலை கேட்டு நேரில் சென்றுள்ளனர். அப்போது கேட் அருகில் நின்ற அதிகாரிகள் திருமணம் ஆகிவிட்டதா? என்ற கேட்டுள்ளனர். அப்போது அந்த இரண்டு பெண்களும் திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் இங்கு வேலை கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.

    இது அந்த பெண்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பான செய்தி மெல்லமெல்ல பரவியது. ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை மிகப்பெரிய அளவில் கட்டுரையாக எழுதி உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் திருமணம் செய்த பெண்களுக்கு வேலைகிடையாது என்ற பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாக விமர்சித்திருந்தனர்.

    இந்த சம்பவம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுள்ளது. மண்டல தலைமை தொழிலாளர் அலுவலக ஆணையரும் அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டுள்ளது.

    திருமணமான பெண்களுக்கு வீட்டு பொறுப்பின் காரணமாக அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேலை மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேவேளையில் ஐ-போன், பாக்ஸ்கான் நிறுவனங்கள் இதுபோன்ற நடைமுறை எங்கள் நிறுவனத்தில் இல்லை என இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

    சம ஊதியச் சட்டம் 1976-இன் பிரிவு 5 ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் எந்தவித பாகுபாடும் காட்டக்கூடாது என்று தெளிவாக குறிப்பிடுகிறது என்று தொழிலாளர் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • விழாவுக்கு பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு முன்னிலை வகிக்கிறார்.
    • விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில், பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது.

    18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.

    இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குடியிருப்பு வளாகத்தை திறந்து வைக்கிறார். விழாவுக்கு பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு முன்னிலை வகிக்கிறார்.

    விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் வி.அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில் ராஜ் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    • விழாவில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.
    • இதில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம்:

    பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது.

    இதில் 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.

    இந்நிலையில், இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார். விழாவில் பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.

    இந்த விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் வி.அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில் ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீபெரும்புதூரில் பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
    • இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது என்றார்.

    காஞ்சிபுரம்:

    பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.

    இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் குடியிருப்பு வளாகத்தை திறந்துவைத்தார். விழாவில் பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.

    பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் பாக்ஸ்கான் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஐபோன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.

    தொழில் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தியும், தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

    மத்திய அரசின் நிதி ஆயோக் குறியீட்டில் தொழில் வளர்ச்சியில் முதல் 10 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    இந்தியாவில் தொழிற்சாலைகளில் பெண் பணியாளர்கள் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

    பெண்களுக்கான புதுமையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

    தெற்கு ஆசியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    ×