search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Foxconn"

    • இந்நிறுவனத்தை தொடங்கிய கவ், 2019ல் தலைமை பதவியை துறந்தார்
    • இதுவரை அரசியலில் அவரால் பெரும் வெற்றி பெற முடியவில்லை

    அமெரிக்காவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள், அதன் பிரபலமான ஐபோனை தயாரிக்க உலகெங்கும் பல நிறுவனங்களை ஒப்பந்ததாரர்களாக நியமித்துள்ளது. இவற்றில் முன்னணியில் இருப்பது சீனாவிலும், தைவான் நாட்டிலும் உள்ள தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹோன் ஹாய் பிரஸிஷன் நிறுவனம்.

    உலகெங்கிலும் இந்நிறுவனம், ஃபாக்ஸ்கான் எனும் பெயரில் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

    மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான ஃபாக்ஸ்கான், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மட்டுமல்லாது, அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் கிண்டில் எனப்படும் மின்னணு புத்தகம், ஜப்பான் நாட்டின் நிண்டென்டோ வீடியோ கேம் உட்பட உலகின் பல நிறுவனங்களுக்கு மின்னணு பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறது.

    இந்நிறுவனத்தை டெர்ரி கவ் எனும் தைவான் நாட்டின் கோடீசுவரர் 1974ல் தொடங்கினார். தனது உழைப்பால், முன்னணி நிறுவனமாக இதனை முன்னேற்றிய கவ், 2019ல் தனது தலைமை பதவியை துறந்தார். இவருக்கு தற்போதைய வயது 72. அதற்கு பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த போதிலும் அவரால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.

    இந்நிலையில், வரும் 2024 ஜனவரி மாதம் தைவான் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் எந்க கட்சியையும் சாராத சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாக கவ் அறிவித்துள்ளர்.

    தைவானின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் 2022 ஆம் ஆண்டு 6வது இடத்தை பிடித்த டெர்ரி கவ், பல தசாப்தங்களாக பொது வெளியில் தனது கருத்துக்களை அஞ்சாமல் கூறும் வழக்கம் கொண்டவராக கருதப்படுகிறார்.

    வெற்றி பெறுவதற்காக தனது தேர்தல் அறிக்கையில் அவர் கூறப்போகும் திட்டங்களை குறித்து யூகங்கள் இப்போதே சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

    • ஐபோன் 15 சீரிசில் மொத்தமாக நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
    • ஐபோன் 15 சீரிசில் டைனமிக் ஐலேன்ட் அம்சம், மெல்லிய டிசைன், பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

    இந்தியாவில் புதிய ஐபோன்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், ஆப்பிள் இன்க் நிறுவனம் ஐபோன் 15 மாடல்களை தமிழ் நாட்டில் உற்பத்தி செய்ய துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழும ஆலையில் முற்றிலும் புதிய ஐபோன் மாடல்களின் உற்பத்தி நடைபெற இருக்கிறது.

    தற்போது உற்பத்திக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. சீனாவில் உள்ள ஆலையில் இருந்து வினியோகம் துவங்கிய பிறகு தான், தமிழகத்தில் இருந்து புதிய யூனிட்கள் அனுப்பப்பட உள்ளன. புதிய ஐபோன் மாடல்கள் செப்டம்பர் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப்பெரும் அப்டேட் ஆக பார்க்கப்படுகிறது.

     

    இந்தியாவில் உற்பத்தி செய்யும் போது, அவற்றுக்கான உபகரணங்கள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்படும். இதற்காக சென்னையில் உள்ள உற்பத்தி ஆலை தயார்நிலையில் உள்ளது. ஐபோன் 15 சீரிசில், ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ பிளஸ் என நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய ஐபோன் 15 சீரிசில் டைனமிக் ஐலேன்ட் அம்சம், மெல்லிய டிசைன், பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று தெரிகிறது. ஐபோன் 15 ப்ரோ சீரிசில் ஏ17 பயோனிக் சிப்செட், ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் ஏ16 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் குறைந்தபட்ச ஸ்டோரேஜ் 256 ஜிபி-யாக உயர்த்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • வேதாந்தாவுடன் இணைந்து குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்க கூட்டு ஒப்பந்தம் செய்திருந்தது.
    • இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி குறித்த தனது லட்சியங்களை இந்த முடிவு மாற்றாது என பாக்ஸ்கான் கூறியுள்ளது.

    மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள உற்பத்தி நிறுவனம் தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான். இந்நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் தயாரிக்க தேவையான முக்கிய உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது.

    இந்நிறுவனம் இந்தியாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவுடன் குஜராத் மாநிலத்தில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி செய்வதற்கு தொழிற்சாலை அமைக்க ரூ.16,000 கோடி மதிப்பிற்கு ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்திருந்தது.

    தற்போது இந்த ஒப்பந்தப்படி செயல்பட இயலாது என கூறி அந்நிறுவனம் விலகியுள்ளது.

    "பரஸ்பர ஒப்பந்தம் மூலம் முடிவு எடுக்கப்பட்டு, வேதாந்தாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி குறித்த தனது லட்சியங்களை இந்த முடிவு மாற்றாது" என கூறியுள்ளது.

    இது குறித்து வேதாந்தா தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.

    இந்தியாவை உலகளாவிய, உயர் தொழில்நுட்ப உற்பத்தி சக்தியாக மாற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியங்களுக்கு இந்த நடவடிக்கை பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    வேதாந்தாவுடனான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த தொழிற்சாலை வந்திருந்தால், இது மிகப்பெரிய ஒன்றாக இருந்திருக்கும்.

    இந்தியாவில் தெலுங்கானாவிலும் பெங்களூரூவிலும் தலா ஒன்று என இந்தியா முழுவதும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார பதட்டங்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்க நிறுவனங்கள், தங்களுக்கு உதிரிபாகங்கள் வழங்கும் நிறுவனங்களை சீனாவிற்கு வெளியே தொழிற்சாலைகளை அமைக்குமாறு வலியுறுத்தி வருகின்றன.

    அமெரிக்காவின் ஆப்பிள், சீனாவின் கம்யூனிஸ்ட் ஆட்சிமுறை குறித்து பொதுவெளியில் நல்ல முறையில் கருத்துக்கள் கூறினாலும், தங்களுக்கு உதிரி பாகங்கள் வழங்கும் ஃபாக்ஸ்கான் உட்பட அனைத்து உற்பத்தியாளர்களிடமும் தங்கள் எதிர்கால உற்பத்தியின் வினியோக சங்கிலி பாதிக்காத வகையில் சீனாவிலிருந்து வெளியேற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

    ஃபாக்ஸ்கானின் முடிவு இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை இலக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

    ×