search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School Management Committee"

    • பள்ளியை சுற்றி உள்ள ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களை பள்ளியில் சேர்க்காமல் உள்ளவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும்.
    • பள்ளியைச் சுற்றி மாற்றுத்திறன் உடைய மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேல்குடிப்பு கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிகூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு பயிற்சியாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.

    வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்றார். பள்ளி தலைவர் வளர்மதி பயிற்சி பற்றி விளக்கினார். மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பள்ளியை சுற்றி உள்ள ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களை பள்ளியில் சேர்க்காமல் உள்ளவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது,

    பள்ளியைச் சுற்றி மாற்றுத்திறன் உடைய மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தலைமை ஆசிரியர் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருந்து சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் முறையான பள்ளிகளில் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்,

    பள்ளியின் செயல்பாடுகளை கண்காணித்து மற்றும் மாணவருடைய கற்றல் திறனை கவனித்து அதற்கேற்ற கற்றல் சூழல்கள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது.

    • மாணவர்கள் உயர்கல்வி தொடர வழிகாட்டுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • எண்ணும் எழுத்தும் கற்றல் முறை என பல்வேறு தலைப்புகளில் ஆலோசிக்கப்பட்டது.

    மடத்துக்குளம் :

    உடுமலை கல்வி மாவட்டத்தில் அரசு தொடக்க நிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாதம் தோறும் மேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி தொடக்கப்பள்ளிகளில் விளையாட்டு, எண்ணும் எழுத்தும், கலை மற்றும் கலாசாரம், நூலகம் மற்றும் வாசிப்பு, நடுநிலைப்பள்ளிகளில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த கல்வி ஆலோசிக்கப்படுகிறது.

    உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள், உயர்கல்வி சார்ந்த வழிகாட்டுதல்கள், மதிப்பீடுகள் மற்றும் வினாடி வினா, நூலகம் மற்றும் வாசிப்புத்திறன், கலை மற்றும் கலாசாரம், விளையாட்டு ஆகிய கருப்பொருளை மையப்படுத்தி விவாதிக்கப்படுகிறது.அவ்வகையில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த மேலாண்மைக் குழு கூட்டத்திற்கு தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார்.

    விருகல்பட்டி ஊராட்சிப்பள்ளி ஆசிரியர் ஜவகர், உயர்கல்வி சார்ந்த விபரங்களை விரிவாக பேசினார். ஆசிரியர்கள் ஜோதிமணி, பாலகிருஷ்ணன், தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. தலைமையாசிரியர் கண்ணகி தலைமை வகித்தார். வட்டார வளமைய ஆசிரியர் ஜெனட்ரோஸிலின், உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    கூட்டத்தில், போதைப்பொருள்கள் பயன்பாட்டை தவிர்த்தல், மாணவர்கள் உயர்கல்வி தொடர வழிகாட்டுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உயர் கல்வி வேலை வாய்ப்பு குறித்து சரவணன் பேசினார். மாணவி ஜனனி நன்றி கூறினார்.

    சாலரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. மடத்துக்குளம் வட்டார கல்வி அலுவலர் சரவணன் பயிற்சி குறித்து பேசினார். வட்டார வளமைய ஆசிரியர் பிரபாகரன், உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார்.தொடர்ந்து ஆர்.டி.ஐ., சட்டம், அரசின் நலத்திட்டம், மத்திய மாநில அரசின் உதவித்தொகை, பள்ளி மேம்பாட்டு திட்டம், எண்ணும் எழுத்தும் கற்றல் முறை என பல்வேறு தலைப்புகளில் ஆலோசிக்கப்பட்டது.

    மேலாண்மைக்குழு தலைவர் புவனேஸ்வரி, கனகராஜ், சடையப்பன் ஆறுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். குரல்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு குழுத்தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார்.துணைத்தலைவர் சித்ரா, குழு உறுப்பினர்கள் கனகராஜ், பாலசுப்ரமணியன், காயத்ரி, தனலட்சுமி, சரோஜினி மற்றும் தலைமையாசிரியை கவுரி, உமாமகேஸ்வரன் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    • ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படாததால் மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். துணை தலைவர் ரத்னா முன்னிலை வைத்தார். தலைமை ஆசிரியை ஸ்டெல்லா வரவேற்றார்.

    ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படாததால் மாணவிகள் அவதிக்குள்ளாகினர். இதனை போக்குவரத்து அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.நஞ்சப்பா பள்ளி சாலை முன்பு நிறுத்தும் அதிகப்படியான வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல், பள்ளியில் இருந்து குறைந்தது 10 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவிகளை கண்டறிந்து, இடைநிற்றலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேராமல் இருக்கும் மாணவர்கள் அடையாளம் கண்டு அதற்கான காரணங்களை ஆராய்ந்து அவர் கல்லூரியில் சேர உரிய ஆலோசனை மற்றும் உதவிகளை செய்தல், நீட், சட்டப்படிப்பு, சி.ஏ., போன்ற உயர் படிப்புகளுக்கு உரிய ஆசிரியர்களை நியமித்து மாணவிகளுக்கு தக்க பயிற்சிக்கான ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்தும் மாணவிகளுக்கு கிடைக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்தும் விளக்கப்பட்டன. மேலாண்மைக்குழு உறுப்பினர் 17 பேர் பங்கேற்றனர்.

    ×