search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு வேலைவாய்ப்பு தேர்வுக்கு இலவச பயிற்சி 28-ந் தேதி தொடங்குகிறது
    X

    கோப்புபடம்.

    அரசு வேலைவாய்ப்பு தேர்வுக்கு இலவச பயிற்சி 28-ந் தேதி தொடங்குகிறது

    • பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாளர் தேர்வாணையத்தால்(எஸ்எஸ்சி) அறிவிக்கப்பட்டுள்ள எஸ்எஸ்சி.(சிஜிஎல்) தேர்வுக்கான இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வழியாக டிஎன்பிஎஸ்சி., டிஎன்யுஎஸ்ஆர்பி., எஸ்எஸ்சி., டி.ஆர்.பி., ஐபிபிஎஸ்., போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது Assistant Audit Officer, Assistant Account Officer, Assistant Section officer, Inspector of income tax, Junior Statistical Officer போன்ற பதவிகளில் 20,000 க்கும் மேற்ப்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 17.9.2022 அன்று பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8.10.2022.

    இத்தேர்விற்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதன் முழுவிவரம் https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

    இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 28.9.2022 அன்று மாலை 2.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தங்கள் பெயரை https://forms.gle/BHUGLvaxfkkCMqKt8 என்ற link-இன் மூலம் google form -ல் பதிவு செய்வதன் மூலமோ (அல்லது) 9499055944 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×