search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
    X

    கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

    கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

    • முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.
    • நோய்களிருந்து கால்நடைகளை எப்படி பாதுகாப்பது? குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி 3-வது கட்ட முகாம் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா கணேஷ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் கால்நடை டாக்டர்கள் மகேந்திரன் தலைமையில் மருத்துவ குழுவினர்கள் டாக்டர்கள் ராஜசேகர், ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர் நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவி ஆய்வாளர்கள் பிரசன்னா, மாதவன், மகாலட்சுமி, வீரமணி சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும் நோய்களிருந்து கால்நடைகளை எப்படி பாதுகாப்பது? குறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதில் மக்கள் பிரதிநிதிகள், கிராம முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×