search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி வாக்குச்சாவடிகளில்  புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர்
    X

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் தலைமையில் பா.ஜனதா நிர்வாகிகள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர்

    • முகாமில் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • வலிமையான பூத் என்ற நிகழ்ச்சிக்கு உமரி சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பா.ஜ.க. துணைத் தலைவர் சசிகலா புஷ்பா,மாவட்ட தலைவர் சித்ராங்தன் ஆலோசனைப்படி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

    இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அதன்படி தூத்துக்குடி மாநகர தெற்கு மண்டலம் 60 பூத் கமிட்டிகளிலும் கிளை தலைவர்கள் மூலம் பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் ஒவ்வொரு பூத்திருக்கும் 5 பேர் நியமனம் செய்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தெற்கு மண்டலத்தில் ஏ.வி.எஸ். தொடக்கப்பள்ளி, கே.டி. கோசல்ராம் உயர்நிலைப்பள்ளி, தங்கமாள்புரம் மேல்நிலைப்பள்ளி, புதிய துறைமுகம் மேல்நிலைப்பள்ளி,தெர்மல் நகர் காமராஜர் பள்ளி, குழந்தை இயேசு துவக்க பள்ளி உட்பட 17 வாக்குசாவடிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல்,நீக்குதல்,முகாமில் பாஜக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

    வலிமையான பூத் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் தலைமையில்,தெற்கு மண்டல தலைவர் மாதவன்,மாவட்ட பொருளாளர் வக்கீல் சண்முகசுந்தரம்,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் தேவகுமார், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெய்கிருஷ்ணன், ஆகியோர் அடங்கிய நிர்வாகிகள் குழு பார்வையிட்டனர்.

    இதில் கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்ன தங்கம்,மகளிர் அணி தெற்கு மண்டல தலைவி செல்வி,துணை தலைவி சிலம்பொலி,அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தெற்கு மண்டல தலைவி சுமித்ரா, பொதுச் செயலாளர் பிரபு, துணைத்தலைவர் பொய்சொல்லலான், வர்த்தகப் பிரிவு தெற்கு மண்டல தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாரிராஜ்,செல்லப்பன் சக்திகேந்திர, பொறுப்பாளர்கள் துர்க்கையப்பன் ,முத்துகிருஷ்ணன், பாலகுமார், முனியசாமி, செல்வம் , பலவேசம், முகேஷ் குலசை ரமேஷ், அருண்பாபு, ராஜ்குமார், விக்னேஷ், தீபன், முத்துச்சாமி கலந்து கொண்டனர்.

    Next Story
    ×