என் மலர்
நீங்கள் தேடியது "yatra"
- ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் திடீரென ‘கினிங் கினிங்’ என மணி ஓசையுடன் ஒன்றன்பின் ஒன்றாக ஏராள மான சைக்கிள்கள் வந்தன.
- சுமார் 85 கி.மீ தூரத்தை கடந்து வந்து இவர்கள் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் உள்ள செந்தில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் நேற்று மாலையில் வழக்கமான போக்குவரத்து நெரிசல் இருந்தது.
இந்த வேளையில் அங்கு திடீரென 'கினிங் கினிங்' என மணி ஓசையுடன் ஒன்றன்பின் ஒன்றாக ஏராள மான சைக்கிள்கள் வந்தன. இதற்கு அங்குள்ள வர்கள் வழி விட்டு ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். இவ்வாறு தொடர்ச்சியாக சைக்கிளில் வந்த வர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் என்பது தெரிய வந்தது.அனைவரும் காவி, மஞ்சள் நிற ஆடைகளை அணிந்தி ருந்தனர்.சைக்கிள்களில் பச்சைக்கொடி கட்டப்பட்டி ருந்தது.
தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் பகுதியை சேர்ந்த குருசாமியான ராஜகோபால் என்பவரின் தலைமையில் அங்கிருந்து நேற்று காலையில் 100 பேர் சைக்கிள்களிலும், 50 பேர் மோட்டார் சைக்கிள்களிலும் வந்தனர். 40-வது ஆண்டாக இந்த யாத்திரையை தொடங்கி உள்ளனர்.
சுமார் 85 கி.மீ தூரத்தை கடந்து வந்து இவர்கள் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் உள்ள செந்தில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதன் பின்னர் நேற்று இரவு திருச்செந்தூரை சென்ற டைந்த இவர்கள் இன்று காலையில் சுவாமி தரிசனம் முடித்த பின் அங்கே தங்கி விட்டு நாளை காலையில் மீண்டும் ஊர் திரும்புவதாக தெரிவித்தனர்.
- வாகனத்தில் முருகன் சிலையை வைத்து, யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- அனுமதி கோரி மனு அளித்தும் இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை.
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த விஷ்வ இந்து பரிஷத்தின் மாநில இணைச்செயலாளர் பரத் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் ஏராளமான பேரணிகள், கூட்டங்கள், கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி வாகனத்தில் முருகன் சிலையை வைத்து, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பூசாரிகள் சிலரோடு யாத்திரையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ந் தேதி, திருச்சி மலைக்கோட்டை பகுதியில் இந்த யாத்திரையை தொடங்கி சமயபுரம், சுவாமிமலை, திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம், திருமங்கலம், பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக மீண்டும் திருச்சி விராலிமலையில் 17-ந் தேதி யாத்திரையை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக அனுமதி கோரி அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படஅனுமதி கோரி அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை. எனவே ஜனவரி 1 முதல் 17-ந் தேதி வரை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் யாத்திரைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கு தனக்கு வழங்கப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்திற்குள் இல்லை என்று கூறி வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தர விட்டார்.
- ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்கிறார்.
- ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் செய்து வரு கின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற 7-ந் தேதி ( நாளை மறுநாள்) ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்கிறார்.இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 200 வேன்கள், 25 பஸ்களில் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் 8-ந் தேதி காலை 6மணிக்கு விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து ராகுல்காந்தி நடை பயணத்தை தொடங்குகிறார்.
அவருக்கு கல்லூரியில் இருந்து கொட்டாரம் காமராஜர் சிலை வரை 3½ கிலோமீட்டர் வரை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கபட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், வடக்கு மாவட்ட தலைவர் காம ராஜ் ஆகியோர் செய்து வரு கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடப்பா மாவட்டம் புலிவெந்தலா பகுதியில் இருந்து பொதுமக்களுடன் பாதயாத்திரையை தொடங்கினார்.
கடந்த மாதம் 25-ந் தேதி ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தபோது, ஒரு வாலிபர் ‘செல்பி’ எடுப்பது போல் நடித்து அவரை கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
அவரை கத்தியால் குத்திய விமான நிலைய ஓட்டல் ஊழியரான சீனிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று (திங்கட்கிழமை) சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‘கடவுளின் கருணையாலும், மக்களின் ஆசீர்வாதத்தாலும் ஜெகன் மோகன் ரெட்டி முழுமையாக பூரண குணம் அடைந்து விட்டார். எனவே அவர் இன்று முதல் தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறார். மறைந்த முதல்-மந்திரி ராஜசேகர் ரெட்டிக்கு மக்கள் ஆதரவு அளித்ததுபோல், ஜெகன் மோகன் ரெட்டிக்கும் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்’ என்றார். #JaganmohanReddy #Yatra