search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராகுல்காந்தி யாத்திரையில் பங்கேற்க தூத்துக்குடியில் இருந்து 200 வேன், 25 பஸ்களில் தொண்டர்கள் பயணம்- மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிக்கை
    X

    ராகுல்காந்தி யாத்திரையில் பங்கேற்க தூத்துக்குடியில் இருந்து 200 வேன், 25 பஸ்களில் தொண்டர்கள் பயணம்- மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிக்கை

    • ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்கிறார்.
    • ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் செய்து வரு கின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 7-ந் தேதி ( நாளை மறுநாள்) ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்கிறார்.இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 200 வேன்கள், 25 பஸ்களில் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் 8-ந் தேதி காலை 6மணிக்கு விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து ராகுல்காந்தி நடை பயணத்தை தொடங்குகிறார்.

    அவருக்கு கல்லூரியில் இருந்து கொட்டாரம் காமராஜர் சிலை வரை 3½ கிலோமீட்டர் வரை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கபட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், வடக்கு மாவட்ட தலைவர் காம ராஜ் ஆகியோர் செய்து வரு கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×