search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு - குமரி மாவட்டத்தில் 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் - கலெக்டர் அரவிந்த் தகவல்
    X

    வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு - குமரி மாவட்டத்தில் 15 லட்சத்து 50 ஆயிரத்து 776 வாக்காளர்கள் - கலெக்டர் அரவிந்த் தகவல்

    • தே.மு.தி.க. சார்பில் செல்வக்குமார் ,மணிகண்டன் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் இசக்கி முத்து உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்ட னர்.
    • கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 362 வாக்காளர்கள் உள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கலெக்டர் அரவிந்த் அரசியல் கட்சியினர் முன்னிலையில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

    இதில் அ.தி.மு.க. சார்பில் ஜெயகோபால், காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் நவீன் குமார், பாரதிய ஜனதா சார்பில் ஜெகநாதன், நாகராஜன், தே.மு.தி.க. சார்பில் செல்வக்குமார் ,மணிகண்டன் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் இசக்கி முத்து உட்பட அரசியல் கட்சியினர் கலந்து கொண்ட னர்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 5 ந்தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அப்போது 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 15 லட்சத்து 92 ஆயிரத்து 555 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான ஆய்வுப் பணி வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ப்பட்டு உள்ளது. அதன் அடிப்படை யில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதி களிலும் 7 லட்சத்து 73 ஆயிரத்து 533 ஆண் வாக்காளர்கள், 7,77,037 பெண் வாக்காளர்கள், 186 இதர வாக்காளர்கள் என மொத்தம் 15 லட்சத்து 50,776 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டி லும் பெண் வாக்கா ளர்கள் அதிகம் உள்ளனர்.

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 91 ஆயிரத்து 362 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 116 பேர். பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 47,132 பேர். இதர வாக்காளர்கள் 114 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    குறைந்தபட்சமாக பத்மநாபபுரம் தொகுதியில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 99 வாக்காளர்கள் உள்ளனர்.இங்கு ஒரு லட்சத்து 19,302 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 771 பெண் வாக்காளர்களும் 26 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 817 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 440 பெண் வாக்காளர்கள், 11 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 268 வாக்காளர்கள் உள்ளனர்.

    குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 914 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 236 பெண் வாக்காளர்களும் 14 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 164 பேர் உள்ளனர்.

    விளவங்கோடு சட்ட மன்றத் தொகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 516 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 25,164 பெண் வாக்காளர்களும் மூன்று இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 683 பேர் உள்ள னர்.

    கிள்ளியூர் தொகுதியில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 888 ஆண் வாக்காளர்களும் ஒரு லட்சத்து 22,294 பெண் வாக்காளர்களும் 18 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,47,200 வாக்காளர்கள் உள்ளனர்.

    2022-ம் ஆண்டு மறு சீரமைப்பின் படி விளவங்கோடு தொகுதி யில் கூடுதலாக ஒரு வாக்கு ச்சாவடி உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்ப டையில் தற்போது குமரி மாவட்டத்தில் 1695 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதியில் 310 வாக்குச்சாவடிகளும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 275 வாக்குச் சாவடிகளும், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி யில் 272 வாக்குச்சா வடிகளும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், தேர்தல் தாசில்தார் சுசீலா ஆகியோர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது உடன் இருந்தனர்.

    Next Story
    ×