என் மலர்
நீங்கள் தேடியது "கராத்தே பாபு"
- 'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
- தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணம் சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன் (ஜெயம் ரவி). கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியது. தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக கூறினாலும் இவர்களின் விவாகரத்துக்கு ரவியின் தோழியான கெனிஷா தான் காரணம் என்று தகவல் வெளியானது. இதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்து தாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று விளக்கம் அளித்தனர். இதனிடையே, ஜெயம் ரவி என்ற தன்னுடைய பெயரை ரவி மோகன் என்று அழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தற்போது ரவி மோகன் 'கராத்தே பாபு' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஐசரி கணேஷ் இல்ல திருமண நிகழ்வில் கலந்து கொண்ட ரவி மோகனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணம் சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.


இந்த திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இத்திருமணத்தில் ரவி மோகனுடன் பெண் ஒருவரும் வந்திருந்தார். அந்த பெண் வேறுயாருமில்லை, பாடகி கெனிஷா தான். இருவரும் ஜோடியாக திருமணத்தில் பங்கேற்றதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலரும் ரவி மோகன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா? என்றும் இருவரும் தங்கள் ரிலேஷன்ஷிப்பை சொல்லவே இப்படி ஜோடியாக வந்ததாகவும் கூறி வருகின்றனர். இதனிடையே ரவி மோகன்- ஆர்த்தி இருவரும் பிரிய இதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
- இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
- இந்தப் படத்தை ஸ்கிரீன் ஸீன் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரவி மோகன். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காதலிக்க நேரமில்லை.' இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதுதவிர நடிகர் ரவி மோகன் சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே ரவி மோகனின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்து இருந்தது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
ரவி மோகனின் 34 படத்திற்கு கராத்தே பாபு என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு அதிகாரப்பூர்வ வீடியோ வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார் என்று தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நீதிமன்ற உத்தரவின் பேரில் நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி ஆகியோர் 3 முறை சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
- விவாகரத்து வழக்கை வருகிற 15-ந்தேதிக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஒத்திவைத்தது.
'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ரவி மோகன் தனது 34-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் ரவி மோகன் அரசியல்வாதியாக நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டு இருந்தது.
சட்டசபையில் ரவி மோகன் பேசும் காட்சிகளுடன் வெளியான இந்த டீசரின் இறுதியில் இப்படத்தின் பெயர் 'கராத்தே பாபு' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் டவ்டே ஜிவால் நாயகியாக நடிக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், நாசர், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பில் பிசியாக நடித்து வரும் ரவி மோகன், ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வரும் குழந்தைகளுடன் விளையாடி, நடனமாடி நேரத்தை செலவிட்டுள்ளார். மேலும் அங்குள்ளவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவின் பேரில் நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி ஆகியோர் 3 முறை சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இனி விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு விவாகரத்து வழக்கை வருகிற 15-ந்தேதிக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- ரவி மோகனின் 34-வது படமான கராத்தே பாபு படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கி வருகிறார்
- ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரவி மோகன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காதலிக்க நேரமில்லை.' இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே ரவி மோகனின் 34-வது படமான கராத்தே பாபு படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்து இருந்தது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார் என்று தெரிகிறது. இந்த படத்தில் நாயகியாக தவ்தி ஜிவால் நடிக்கவுள்ளார். இதன் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இவர் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கராத்தே பாபு திரைப்படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.
- கராத்தே பாபு படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரவி மோகன். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'காதலிக்க நேரமில்லை.' இந்தப் படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இதுதவிர நடிகர் ரவி மோகன் சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே ரவி மோகனின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்து இருந்தது. ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ரவி மோகனின் 34 படத்திற்கு கராத்தே பாபு என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தில் நடிகர் சக்தி வாசுதேவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை படக்குழு தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், படத்தில் சக்தி வாசுதேவன் "பாக்சர் செல்வராஜ்" என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும், படக்குழு சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.