search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழுதூர் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் திறப்பு விழா
    X

    ஜாமியா மஸ்ஜித் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்கள்.

    வழுதூர் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் திறப்பு விழா

    • ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் திறப்பு விழாவில் அல்பரிதா குரூப் நிறுவனங்களின் சேர்மன் அபுல்கலாம் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
    • ஜாமியா மஸ்ஜித் விழா கமிட்டி மேலாளர் சகுபர் அலி நன்றி கூறினார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தில் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் பிரமாண்டமாக கட்டப்ப ட்டுள்ளது. இந்த இறையில்ல கட்டுமான பணிக்கு பெரும் முயற்சி மேற்கொண்ட முன்னாள் ஜமாத் தலை வர்கள், அல்பரிதா குரூப் நிறுவனங்களின் நிறுவனம் ஹாக்கி ஜமால் முகமது, முன்னாள் ஜமாத் தலைவர் துல்கருணை சேட், முன்னாள் பொருளாளர் அபு ஹனிபா வழுதூர், முன்னாள் இமாம் அப்துல் காதர் ஆலி, முன்னாள் ஜமாத் தலைவர் அப்துல் ரஹீம் மற்றும் வழுதூர் குலாம் முகமது ஆகியோர் முன்னோர்களின் துவா பரக்கத்தாலும் இறைவனின் நாட்டப்படி இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    வழுதூர் கிராம மக்களின் முயற்சியால் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா இன்று காலை 9 மணிக்கு தொடங்கப்பட்டு மாலை 2 மணி வரை சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு உலக நாடுகளில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட அல்பரிதா அல்நஜ்மா குரூப் நிறுவனங்களின் சேர்மன் அபுல்கலாம், அவரது சகோதரர்கள் பகுருதீன் ஹாஜா ஜமால் நசுருதீன் ஆகியோர் நிர்வாக கமிட்டியினருடன் இணைந்து பள்ளிவாசல் திறப்பு விழாவுக்காக ஒரு மாதமாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து சிறப்பு அழைப்பிதழ் வழங்கி விழாவில் கலந்து கொள்ள அழைத்தனர்.

    அதன்படி மாவட்ட த்தில் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    முன்னதாக திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த அனைவருக்கும் அல் நஜ்மா அல்பரிதா குழுமத்தின் சார்பிலும், வழுதூர் கிராம மக்கள் வழுதூர் இளைஞர் சங்கத்தினர் சார்பிலும் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

    நேற்று இரவு பள்ளி வாசல் முழுவதும் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு திறப்பு விழாவை காண ஏற்பாடுகளை வழுதூர் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜமாத் தலைவர் கமாலுதீன், தற்பொழுது நிர்வாகத்தில் உள்ள ஜமாத் நிர்வாகிகள், இளைஞர் சங்கத்தினர் விழா கமிட்டியினர் ஏற்பாட்டில் இணைந்து இதற்கான திறப்பு விழா ஏற்பாடுகளை செய்தனர்.

    திறப்பு விழாவுக்கு வழு தூர் ஜமாத் தலைவர் முகம்மது மன்சூர் தலைமை தாங்கினார். வழுதூர் ஜமாத் செயலாளர் அப்துல் ஹக்கீம், மலேசியா ஜமாத் தலைவர் லியாக்கத் அலி, மலேசியா ஜமாத் செயலாளர் சிராஜூதீன், துபாய் ஜமாத் தலைவர் சேகு ஜெய்னுலாப்தீன், துபாய் ஜமாத் செயலாளர் தாவுத் இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். விழா கமிட்டி செயலாளர் முஸ்தபா கமால் வரவேற்றார். தலைமை இமாம் ரஹ்மத்துல்லா மிஸ்பாகி கிராஅத் ஓதினார்.

    வி.எஸ்.எம். அமானுல்லா, ஓ.எம்.எஸ்.அன்சாரி, அபுஹனி, சீனி அகமது, ஆகியோர் பள்ளிவாசலை திறந்துவைத்தனர்.

    முகம்மது ஹாருன், முகம்மது சஜருதீன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    இறை இல்லத்தைக் கட்டிக் கொடுத்த வசந்தா கன்ஸ்ட்ரக்சன்ஸ் தலைமைப் பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இல்ல வடிவமைப்பாளர் ரத்னா பில்டர்ஸ் தலைமைப் பொறியாளர் பால்பாண்டி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    ஜாமியா மஸ்ஜித் விழா கமிட்டி மேலாளர் சகுபர் அலி நன்றி கூறினார்.

    அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், நாசர், நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ஆளூர் ஷா நவாஸ், பரமக்குடி முருகேசன், திருவாடனை கரு.மாணிக்கம், ஐ.யு.எம்.எல். மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபூபக்கர், மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, மனித நேய ஜன நாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×