search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grand Jamia"

    • வழுதூர் கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் வடிவமைத்த ரத்னா பில்டர்ஸ் தலைமை பொறியாளர் பால்பாண்டியனுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
    • இது குறித்த தகவல் வலைத்தளங்களில் வைரலாக பரவி ஏராளமானோர் பொறியாளர் பால்பாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரில் உள்ள ரத்னா பில்டர்ஸ் பல ஆண்டுகளாக கட்டிட பணிகளில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த நிறுவனத்தை அறியா தவர்கள் இருக்க முடியாது. பல்வேறு இடங்களில் புதிய பள்ளிவாசல் உள்பட உலகத்தரம் வாய்ந்த முறையில் பல கட்டிடங்களை வடிவமைத்து கட்டிக் கொடுத்துள்ளனர்.

    இந்த வரிசையில் ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் திறக்கப்பட்ட கிராண்ட் ஜாமியா மஸ்ஜித் இறையில்லமும் இடம் பெற்றுள்ளது. இந்தப் பள்ளிவாசலுக்கான வடிவமைப்பு பணிகளை ரத்னா பில்டர்ஸ் தலைமை பொறியாளர் பால்பாண்டியன் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.

    திறப்பு விழாக்கு வருகை தந்த ஏராளமான ஜமாத் நிர்வாகிகள் பால்பாண்டியனை நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டினர். இறையில்லத்தை வடிவ மைத்த பொறியாளர் பால் பாண்டியனுக்கு ரூ.8 லட்சம் சம்பளம் கொடுத்துள்ளனர். சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்தப் பணத்தை நன்கொடையாக விழா கமிட்டினரிடம் வழங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்த தகவல் வலைத்தளங்களில் வைரலாக பரவி ஏராளமானோர் பொறியாளர் பால்பாண்டியனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ×