என் மலர்
நீங்கள் தேடியது "Merry Christmas"
- அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இணைந்து நடித்திருக்கும் பாலிவுட் படம் மெரி கிறிஸ்துமஸ்.
- இப்படத்தின் ரிலீஸ் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது மெரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என பேசப்பட்டது. பிறகு அதனை மறுத்து தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது. மேலும் இப்படம் டிசம்பர் மாதம் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்திருந்தனர்.

மெரி கிறிஸ்துமஸ்
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தொழில் நுட்ப பணிகள் முடியாததாலும் திட்டமிட்ட தேதியில் வேறு படங்கள் திரைக்கு வருவதாலும் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி மதுரை பேராயர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- மனிதநேயமிக்க சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்.
மதுரை
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மதுரை கத்தோலிக்க கிறிஸ்தவ உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை மகிழ்வோடு கொண்டாட காத்திருக்கும் மனுகுலத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மீட்பரின் வருகையை கணித்த ஞானிகளும், வல்லுநர்களும் ஆவலோடு காத்திருந்த காலம் கனிந்த அற்புத நாள். இயேசுவின் பிறப்பு தனித்துவம் மிக்கது.
இயேசுவின் பிறப்பால் பெத்லகேம் என்ற சிறிய இடம், உலகம் அறியும் உன்னத இடமாக மாறிப் போனது. மாடுகள் அடையும் மாட்டுத்தொழுவம் மாட்சி மை பெற்றது. இயேசு இதயத்தில் பிறக்க இடம் அளிக்க துணிந்து விட்டால் நம் வாழ்வு புனிதமடையும். சமூக அவலங்கள் அகலும். சண்டை சச்சரவுகளுக்கு துணை நிற்போருக்கு சவுக்கடி கிடைக்கும். தீவிரவாதம் வேரறுக்கப்படும்.
புதிதாக பிறந்துள்ள இறைமகனின் அருளால், புத்தாண்டில் புதிய மாற்றத்தை கொண்டு வருவோம். இறைவன் கொண்டு வந்த அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம், ஏழை களுக்கு மறுவாழ்வு போன்ற மதிப்புகளை பகிர்வோம். மனிதநேயமிக்க சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்.
தோல்விகளை துரத்தி, வெற்றிகளை குவித்து. பகைமை மறந்து, சமூக அநீதிகளை அகற்றி, பெண்மையை போற்றி, சாதிகளை சாகடித்து, வறுமையை ஒழித்து, வாழ்வாங்கு வாழ்ந்திட கிறிஸ்துமஸ் திருநாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நடிகர் விஜய் சேதுபதி பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
- இவர் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பிற்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது மெரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என பேசப்பட்டது. பிறகு அதனை மறுத்து தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது. மேலும் இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.

மெரி கிறிஸ்துமஸ் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். பல நாட்களுக்கு பின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் இணைந்து 'மேரி கிறிஸ்மஸ்' படத்தில் நடித்துள்ளனர்.
- இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.
பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மேரி கிறிஸ்மஸ்'. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிப்ஸ் பிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

மேரி கிறிஸ்மஸ்
இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் தனித்தனியாக பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். 'மேரி கிறிஸ்மஸ்' திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது, இப்படம் டிசம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
- விஜய் சேதுபதி பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடித்துள்ளார்.
- தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் தனித்தனியாக பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர்.
பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மேரி கிறிஸ்துமஸ்'. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிப்ஸ் பிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் தனித்தனியாக பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். 'மேரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு முன்பே அறிவித்து பின்னர் டிசம்பர் 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது இந்த தேதியும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, 'மேரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. கத்ரீனா கைஃப் - விஜய் சேதுபதியின் கெமிஸ்ட்ரியை பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்கள் இதனால் வெறுப்பின் உச்சத்தில் உள்ளனர்.
- மெரி கிறிஸ்துமஸ் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.
- இந்த படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகியுள்ளது.
கேத்தரினா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி பிரதான வேடங்களில் நடித்திருக்கும் 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது.
ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் ஆகியோர் இந்திப் பதிப்பில் நடித்துள்ளனர்.

இதேபோல் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் கதைக்களம், கொண்டாட்டம் மிகுந்த கிறிஸ்மசை மையமாகக் கொண்டிருப்பதால் 'மெரி கிறிஸ்மஸ்' என்று படத்திற்கு பெயரிட்டிருக்கிறது.
- படைப்பாளியாகவும் ஒருங்கிணைந்த அற்புதமான மனிதர் அவர்.
- படத்தின் வெளியீட்டுக்காகவும் காத்திருக்கிறோம்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான, பெரிதும் எதிர்பார்க்கப்படும் மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கத்ரினா கைஃப், விஜய் சேதுபதி இணைந்திருக்கும் இத்திரைப்படம் ரசிகர்களுக்கு வசீகரமான அனுபவத்தை வழங்கும்.
மெரி கிறிஸ்மஸ் திரைப்படத்தில் இயக்குனர் ஸ்ரீராம் ராகவனுடன் இயக்கத்தில் பணியாற்றியது குறித்து நடிகை கத்ரினா கைஃப் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, "இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் சாருடன் பணியாற்றியது எனது கனவு நினைவானது என்று தான் சொல்ல வேண்டும். எனக்கு கிடைத்த நம்ப முடியாத நல்வாய்ப்பு என்று இதைச் சொன்னால் மிகையாகாது. தனித்துவமிக்க இயக்குனரான ஸ்ரீராம் ராகவன் சாரின் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுவது வேறு ஓர் உலகத்தில் நுழைந்ததைப் போலவே இருக்கும். நல்ல மனிதராகவும் சிறந்த படைப்பாளியாகவும் ஒருங்கிணைந்த அற்புதமான மனிதர் அவர்."
"அவருடன் பணியாற்றியது, குறிப்பாக இரண்டு மொழி படங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக எனக்கு அமைந்தது. நான் உட்பட படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் முதல் நாளிலிருந்து படத்தின் உருவாக்கத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தோம். இப்போது படத்தின் வெளியீட்டுக்காகவும் காத்திருக்கிறோம்," என்று தெரிவித்தார்.
- ராதிகா ஆப்தே ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி- கத்ரீனா கைஃப் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இன்று காலை 8.30 மணிக்கு விமானத்தில் செல்ல இருந்தேன். ஆனால் தற்போது 10.15 மணியைக் கடந்தும் விமானம் இன்னும் புறப்படவில்லை. ஆனால், விமானம் புறப்பட்டுவிடும் என கூறி பயணிகள் அனைவரையும் ஏரோ பிரிட்ஜில் வைத்து பூட்டி விட்டனர்.
பயணிகளில் பலர் குழந்தைகளை வைத்துள்ளனர். வயதானவர்களும் உள்ளனர். எல்லோரையும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஏரோ பிரிட்ஜில் அடைத்துவைத்துள்ளனர். பாதுகாவலர்கள் கதவை திறக்கவில்லை. ஊழியர்களுக்கும் என்ன நடக்கின்றது என தெரியவில்லை. நானும் உள்ளே பூட்டப்பட்டுள்ளேன். 12 மணி வரை உள்ளேயே இருக்க வேண்டியிருக்கும் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

குடிக்க தண்ணீர் கூட இல்லை. வேடிக்கையான இந்தப் பயணத்துக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சியையும் அவர் பகிர்ந்துள்ளார். ஆனால், விமான நிலையம் தொடர்பான எந்த ஒரு விவரத்தையும் அவர் தனது பதிவில் குறிப்பிடவில்லை.






