search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "festivity"

    • கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி கோவில் உற்சவ விழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    பாலமேடு அருகே உள்ள வைகாசிபட்டி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட சாத்தியார் அணை அருகில் உள்ள கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி கோவில் உற்சவ விழா நடந்தது. அழகர்கோவில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கி பின்னர் அழகர்மலைக்கு திரும்பும் நாளில் இந்த கோவிலில் உற்சவ விழா நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனாக சுவாமிக்கு உப்பு, சேவல், காய்கறிகள், விைள பொருட்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.

    அங்குள்ள கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமிக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிசேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வைகாசிபட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

    ×