பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' ஒலிபரப்பு

ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ ஒலிபரப்பு நடந்தது. மாவட்ட பா.ஜ.க தலைவர் ஏற்பாடு செய்திருந்தார்.
பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' ஒலிபரப்பு
Published on

ராமநாதபுரம்

பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ரேடியோவில் பொதுமக்களிடம் பேசி வருகிறார். இதன் 100-வது பகுதியான நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அவரது பேச்சை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் 800-க்கும் அதிகமான இடங்களில் பொதுமக்கள் கேட்கும் வகையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு பெரிய திரை மூலம் பிரதமரின் உரையை தமிழாக்கம் செய்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் பிரவீன் முன்னிலை வகித்தனர்.

மாநில கலை கலாச்சார பிரிவு செயலாளர் தாரணி ராமகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன், பவர் நாகேந்திரன், ரமேஷ்பாபு, நிகழ்ச்சி பொறுப்பாளர்- மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமவீரபாகு, 'மனதின் குரல்' ஒருங்கிணைப்பாளர்கள் சவுந்திரபாண்டியன், ரமேஷ் பாபு, செய்தி தொடர்பாளர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பா.ஜ.க மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் பிரவீன் ஏற்பாட்டில் தி.மு.க மாநில மருத்துவரணி இணை அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர்

அவர்களை பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆர்.தரணி முருகேசன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com