என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால்காரர்"

    • தன்னை பாஜககாரராக காட்டிக் கொள்கிறார் ஆளுநர்
    • அதிமுக - பாஜக கூட்டணியை 2 முறை தோற்கடித்துள்ளோம்

    "ஆளுநரின் அதிகாரம் என்பது ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே" என்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கே: கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு குறித்து உங்கள் பதில் என்ன?

    பதில்: ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுதான் சட்டமியற்றும் அதிகாரம் மிக்கது. நியமனப் பதவியான கவர்னர் பதவி என்பது ஒரு கவுரவப் பதவிதான். சட்டமன்றத்தின் அதிகாரத்தை முடக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பின் வாயிலாக தெளிவுபடுத்தி-மத்திய-மாநில உறவுகளில் அதற்குரிய அதிகாரம், ஒரு தபால்காரருக்குரியதுதான் என்பதைத் தொடர்ந்து தி.மு.க சொல்லி வருகிறது. அது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டி ருக்கிறது.

    கே: கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிலேயே தொடர வேண்டும் என்று நீங்கள் இன்னும் நினைக்கிறீர்களா?

    பதில்: அவருக்குரிய பதவிக்காலம் முடிந்தபிறகும் தமிழ்நாட்டில்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழுக்கு எதிராகவும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராகவும், தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராகவும் செயல்படும் ஆளுநர், பச்சையான பா.ஜ.க. காரராகவே வெளிப்படுத்திக் கொள்கிறார்.

    அவருடைய அத்தனை செயல்பாடுகளும் மக்களால் வெறுக்கப்படுவதால், அவர் பதவியில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளை இன்னும் அதிகமாக மேற்கொண்டு, தி.மு.க.வுக்கு மறைமுகமாக உதவி செய்வார்.

    என்று தெரிவித்தார்.

    • மதுரையில் ரெயில்வே பார்சல்களை தபால்காரர் மூலம் டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் இன்று (19-ந்தேதி) மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் நடந்தது.

    மதுரை

    பயணிகள் ரெயில்களில் சரக்கு போக்குவரத்துக்கு என தனி சரக்கு பெட்டி இணைக்கப்பட்டு பார்சல் சேவை நடைபெற்று வருகிறது. அதேபோல தபால்கள் பயணிகள் ரெயில்களில் தனி பெட்டிகளில் அல்லது சரக்கு பெட்டிகளில் ரெயில் மெயில் சர்வீஸ் மூலம் அனுப்பப்படுகிறது.

    வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வசதிக்காக ரெயில்வேயும், தபால் துறையும் இணைந்து ரெயில் பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறது. சூரத்-வாரணாசி இடையே தப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த சேவை நடைபெற்று வருகிறது.

    இந்த சேவையில் தபால் துறை வாடிக்கையாளர்களிடம் இருந்து சரக்குகளை பெற்று ரெயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யும். பின்பு பார்சல் சேரும் ரெயில் நிலையத்திலும் ரெயிலில் வந்த பார்சலை பெற்று வாடிக்கையாளரிடம் தபால் துறையே ஒப்படைக்கும் வசதியும் உள்ளது.

    இதன் மூலம் உற்பத்தி பொருட்கள் உற்பத்தியாகும் இடத்தில் இருந்து நேரடியாக வாடிக்கை யாளரின் வாசலுக்கே சென்று சேரும் வாய்ப்பு உள்ளது. வாடிக்கையாளருக்கு வசதியாக இருக்கும் இந்த திட்டத்தை மற்ற பகுதிகளிலும் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் அமல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களை விளக்கும் வகையில் ரெயில்வே துறை, தபால் துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் இன்று (19-ந்தேதி) மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் நடந்தது. இதில் ரெயில்வே வாரிய திட்ட இயக்குநர் ஜி.வி.எல்.சத்யகுமார், மதுரை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜெய்சங்கர், தபால் துறை இயக்குநர் சரவணன், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ஆர்.பி.ரதிப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டு திட்ட விளக்க உரையாற்றினர்.

    இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் வர்த்தகர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • மதுரை அருகே தபால்காரர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறையை சேர்ந்தவர் தேவராஜன் (வயது57). இவர் பழைய குயவர்பாளையம் ரோட்டில் உள்ள தபால் அலுவலகத்தில் தபால்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. சம்பவத்தன்று பணியில் இருந்த தேவராஜன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சக ஊழியர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார்.
    • பாதிக்கப்பட்ட நபர் தபால்காரருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார்.

    உத்தரபிரதேசத்தில் ரூ.500 லஞ்சம் கொடுக்க மறுத்ததால், ஒருவரின் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை தபால்காரர் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒருவருக்கு பாஸ்போர்ட் தபாலில் வந்துள்ளது. ஆனால் பாஸ்போர்ட் கொடுப்பதற்கு தபால்காரர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் தபால்காரருக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தபால்காரர் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை கிழித்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாதிக்கப்பட்ட நபர் தபால்காரருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    மேலும், தபால்காரர் ஒவ்வொரு தபால் கொடுப்பதற்கும் ரூ.100 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ×