search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு வரவேற்பு
    X

    தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு வரவேற்பு

    • பாத பூஜை செலுத்தி மரியாதை செலுத்தினர்.
    • இதில் திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட ஏராள மான ஆதீனம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடமான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது.

    ஆதீனத்துக்கு சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் ஆலய திருக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ம் தேதி புதன்கிழமை நடைபெறுகின்றது.

    இதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி, தருமபுர ஆதீன மடத்திலிருந்து ஆதீன பூஜா மூர்த்தி செந்தமிழ் சொக்கநாதருடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையை துவங்கினார்.

    ஒட்டகம் குதிரை ஆகிய முன்னே செல்ல பரிவாரங்களுடன் மேளதாளங்கள் முழங்க பாதயாத்திரையாக சென்ற மடாதிபதிக்கு சேந்தங்குடி வள்ளலார் கோயில் நிர்வாகிகள் பூர்ண கும்பம் வைத்து, பாத பூஜை செலுத்தி மரியாதை செலுத்தினர்.

    முன்னதாக ஆலய மடத்தில் செந்தமிழ் சொக்கநாதருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்ய ப்பட்டது.

    இதில் திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட ஏராள மான ஆதீனம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×