search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகாகாளியம்மன் கோவிலில் உண்டியல் கொள்ளை
    X

    மகாகாளியம்மன் கோவிலில் உண்டியல் கொள்ளை

    • மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்துள்ளனர்.
    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள 2-ம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் வாசலில் உண்டியல் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்துள்ளனர்.

    உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதைத் தொடர்ந்து மர்மநபர்கள் உண்டியலில் உள்ள பாதி பணத்தை அள்ளிக்கொண்டு அருகில் உள்ள இருட்டில் பதுங்கினர். பின்னர் சிறிதளவு பணத்தை அங்கேயே விட்டு, விட்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×