என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறையில், கோடை விழா கலை நிகழ்ச்சி தொடக்கம்
- 2023-ம் ஆண்டுக்கான கோடை விழா கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
- 16 மாநிலங்களை சேர்ந்த 270 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி:
இந்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய 2023-ஆம் ஆண்டுக்கான கோடை விழா கலைநிகழ்ச்சி மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
3 நாள் நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்குவங்கம், உத்தரகாண்ட், ஆந்திரபிரதேசம், கேரளா, கர்நாடகா, குஜராத், தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், கோவா ஆகிய 16 மாநிலங்களில் சேர்ந்த 270 கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள் நடைபெறும் இக்கலை நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜகுமார், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மைய அதிகாரி நாதன், சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை பரணிதரன், சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம், கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங்பைசல் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனர்.
இதில், மத்திய பிரதேச மாநிலத்தில் இயற்கை பேரழிவுகள் மற்றும் நோய்களிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக ஷிதலாதேவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடத்தப்படும் படாய் நாட்டுப்புற நடனம், சத்தீஸ்கர் மாநிலத்தின் சத்னாமி சமூகத்தினர் மகி பூர்ணிமாவில் நிகழ்த்தும் பந்தி நாட்டுபுற நடனம், ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த குஜராத் பழங்குடியினர் வேட்டையாடிய பின்னர் ஏற்படும் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் விதமாக ஆடும் சித்தி டமால் நடனம், உத்தர பிரதேச மாநிலம் பிரஜ் பகுதியை சேர்ந்த மக்கள் ராதா மற்றும் கிருஷ்ணர் இடையேயான காதல் அத்தியாயத்தில் இருந்து உருவாக்கப்பட்டு, ஆடும் மயூர் ஹோலி நடனம் ஆகிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இதில், காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ், வட்டார தலைவர் ஜம்பு கென்னடி, மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத், நகர செயலாளர் ராமகிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர் சௌ.சர்வோதயன் மற்றும் திரளான ரசிகர்கள் பங்கேற்று கண்டு ரசித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்