search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India vs Afghanistan"

    பெங்களூருவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் விளையாடி வரும் நிலையில், இன்று ஆப்கன் வீரர்கள் பாரம்பரிய முறையில் ரம்ஜான் கொண்டாடினர். #INDvAFG #EidMubarak
    பெங்களூரு:

    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் ஆப்கானிஸ்தான் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோருடன் களம் இறங்கியது. முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் இந்திய அணி 474 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


    இந்நிலையில், ரம்ஜான் தினமான இன்று காலை போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி உட்பட அனைத்து வீரர்களும் பாரம்பரிய முறையில் ஆடை அணிந்து ரம்ஜானை கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்த புகைப்படங்களை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


    ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு பின்னர் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாட தயாராகினர். ஆப்கன் வீரர்கள் ரம்ஜான் கொண்டாடிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. #INDvAFG  #EidMubarak

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 474 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. #INDvAFG
    பெங்களூரு:

    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கிறது. வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் ஆப்கானிஸ்தான் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோருடன் களம் இறங்கியது. இந்திய அணியில் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகிய மூன்று தொடக்க வீரர்களும் இடம்பிடித்தனர்.

    தவான், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் அதிரடியாக விளையாட முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் முதல்நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளைக்கு முன்பே சதம் அடித்து அசத்தினார்.

    தவான் சதத்தால் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 27 ஓவரில் 158 ரன்கள் குவித்திருந்தது. தவான் 104 ரன்னுடனும், முரளி விஜய் 41 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும், தவான் 107 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு தவான்- முரளி விஜய் ஜோடி 28.4 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது.

    2-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். முரளி விஜய் 80 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அதன்பின் விஜய் தனது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். முரளி விஜய் சத்ததை நெருங்கிய நேரத்தில் மழை குறுக்கீட்டது. இதனால் இந்தியா 45.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது முரளி விஜய் 94 ரன்கள் எடுத்திருந்தார்.

    மழை நீடித்ததால் தேனீர் இடைவேளை விடப்பட்டது. தேனீர் இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கியது. முரளி விஜய் 99 ரன் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை பெய்தது. அதன்பின் ஆட்டம் தொடங்கியதும் முரளி விஜய் 143 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் இந்தியாவின் ஸ்கோர் 105 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி 54 ரன்கள் எடுத்தார். 280 ரன்னில் இந்த ஜோடி பிரிந்தது.

    அதன்பின் வந்த புஜாரா 35 ரன்னிலும், ரகானே 10 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். சுமார் 8 வருடத்திற்குப் பிறகு களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் ரன்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்தியா 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல்நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ஹர்திக் பாண்டியா 10 ரன்னுடனும், அஸ்வின் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 



    இன்று காலை இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது. அஷ்வின் 18 ரன்களும் அவருக்கு அடுத்து இறங்கிய ஜடேஜா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா இறுதி கட்டத்தில் நிதானமாக விளையாடி 71 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் இந்திய அணி 474 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

    இதனை அடுத்து, ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை விளையாட உள்ளது. 
    அம்பயர் விக்கெட் கொடுக்க மறுத்ததால் 24 ரன்னில் இருந்து தப்பிய தவான் சதத்துடன் சாதனையும் படைத்துள்ளார். #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் உற்சாகத்துடன் களம் இறங்கினார்கள். இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தவான், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வஃபாதர், யாமின் அஹ்மத்சாய் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்குதலை தொடங்கினார்கள்.

    10-வது ஓவரை வஃபாதர் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்து தவானின் பேடை தாக்கியது. ஆனால் பந்து லெக் ஸ்டம்பை விட்டு விலகிச்செல்லும் என்பதால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரிவியூ கேட்க ஆர்வம் காட்டவில்லை.

    அடுத்த பந்தை ஆஃப்ஸ்டம்பிற்கு வெளியே பவுன்சராக வீசினார். தவான் பேட்டை சற்று தூக்கி தடுக்க முயன்றார். பந்து பேட்டை உரசியபடி விக்கெட் கீப்பர் கையில் தஞ்சம் அடைந்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் அவுட் அப்பீல் கேட்டனர். ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார்.



    உறுதியாக பேட்டில் பட்டதா? என்பதை யூகிக்க முடியாத ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரிவியூ கேட்க விரும்பவில்லை. ஆனால் ரீபிளே-யின்போது அல்ட்ராஎட்ஜ் டெக்னாலஜியில் பந்து பேட்டில் உரசியது தெளிவாக தெரிந்தது. இதனால் வஃபாதர் முதல் விக்கெட்டை வீழ்த்தும் வாய்ப்பை இழந்தார்.

    அப்போது தவான் 33 பந்தில் 24 ரன்கள் எடுத்திருந்தார். நடுவர் கருணையால் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 107 ரன்கள் எடுத்ததுடன், மதிய உணவு இடைவேளைக்கும் சதம் அடித்த 6-வது வீரரும், இந்தியாவின் முதல் வீரரும் என்ற சாதனையை தவான் படைத்துள்ளார்.
    தவான், விஜய் சதத்தால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்துள்ளது. #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிறது. வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் ஆப்கானிஸ்தான் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோருடன் களம் இறங்கியது. இந்திய அணியில் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகிய மூன்று தொடக்க வீரர்களும் இடம்பிடித்தனர்.

    தவான், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் அதிரடியாக விளையாட முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் முதல்நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளைக்கு முன்பே சதம் அடித்து அசத்தினார்.

    தவான் சதத்தால் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 27 ஓவரில் 158 ரன்கள் குவித்திருந்தது. தவான் 104 ரன்னுடனும், முரளி விஜய் 41 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும், தவான் 107 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு தவான்- முரளி விஜய் ஜோடி 28.4 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது.

    2-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். முரளி விஜய் 80 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அதன்பின் விஜய் தனது ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். முரளி விஜய் சத்ததை நெருங்கிய நேரத்தில் மழை குறுக்கீட்டது. இதனால் இந்தியா 45.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது முரளி விஜய் 94 ரன்கள் எடுத்திருந்தார்.



    மழை நீடித்ததால் தேனீர் இடைவேளை விடப்பட்டது. தேனீர் இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கியது. முரளி விஜய் 99 ரன் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை பெய்தது. அதன்பின் ஆட்டம் தொடங்கியதும் முரளி விஜய் 143 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் இந்தியாவின் ஸ்கோர் 105 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி 54 ரன்கள் எடுத்தார். 280 ரன்னில் இந்த ஜோடி பிரிந்தது.



    அதன்பின் வந்த புஜாரா 35 ரன்னிலும், ரகானே 10 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். சுமார் 8 வருடத்திற்குப் பிறகு களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் ரன்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்தியா 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல்நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ஹர்திக் பாண்டியா 10 ரன்னுடனும், அஸ்வின் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



    ஆப்கானிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாமின் அஹ்மத்சாய் 2 விக்கெட்டும், வாஃபாதர், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது. 1 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் பெங்களூருவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    தவான் அதிரடியாக விளையாட முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 64 பந்தில் 50 ரன்னைத் தொடடது. தவான் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா 19.4 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 25.5 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    தொடக்க வீரர் தவான் 87 பந்தில் 18 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். இவரது சதத்தால் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 27 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 158 ரன்கள் குவித்தது. தவான் 104 ரன்களுடனும், முரளி விஜய் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய தவான் 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை யாமின் அஹ்மத்சாய் வீசினார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய என்ற வீரர் பெருமையை பெற்றார்.



    அடுத்து முரளி விஜய் உடன் லோகேஷ் ராகுல் ஜோடி சேர்ந்தார். முரளி விஜய் 80 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் சதத்தை நெருங்கிய வேளையில் மழை குறுக்கீட்டது.

    இதனால் இந்தியா 45.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் தேனீர் இடைவேளை விடப்பட்டது. அப்போது முரளி விஜய் 94 ரன்களும், லோகேஷ் ராகுல் 33 ரன்களும் எடுத்திருந்தனர்.
    இரக்கம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று ஆப்கானிஸ்தான் டெஸ்ட் குறித்து இந்திய அணி கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார். #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் ஆகும்.

    முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் களம் இறங்கினாலும், நாங்கள் இரக்கம் காட்டமாட்டோம், அதேபோல் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று கேப்டன் ரகானே கூறியுள்ளார்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் குறித்து ரகானே கூறுகையில் ‘‘நாங்கள் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணியை சாதாரணமாக நினைத்து களம் இறங்க போவதில்லை. அவர்கள் சிறப்பாக விளையாடக் கூடிய அணி. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். கிரிக்கெட் ஒரு வேடிக்கையான போட்டி என்பதால் எதிரணிக்கு எந்தவொரு வாய்ப்பையும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது. நாங்கள் களம் இறங்கி இரக்கமற்ற நிலையில் விளையாட விரும்புகிறோம்.



    நாங்கள் எங்களுடைய பலம் மற்றும் சாதகமான விஷயத்தோடு களம் இறங்க இருக்கிறோம். நாங்கள் ஆப்கானிஸ்தான் அணியை பற்றி யோசிக்க வேண்டியதில்லை. எதிரணிக்கு மரியாதை கொடுக்க வேண்டியதுதான். ஆனால், நாங்கள் களமிறங்கி 100 சதவிகிதத்திற்கு மேல் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது’’ என்றார்.
    காம்பிரை பற்றி நினைத்தாலே எமோசன் ஆகிவிடுவேன் என்று மொகமது ஷமிக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்துள்ள சைனி கூறியுள்ளார்.
    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நாளைமறுநாள் (14-ந்தேதி) தொடங்குகிறது. இந்திய அணியில் மொகமது ஷமி உடற்தகுதி டெஸ்டில் தோல்வியடைந்ததால் நவ்தீப் சைனி அணியில் இடம்பிடித்துள்ளார்.

    டெல்லி அணிக்காக விளையாடி வரும் சைனி, தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு கம்பீர்தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். 2013-ம் ஆண்டு டெல்லி ரஞ்சி அணியின் வலைப் பயிற்சியின்போது பந்து வீசிய நேரத்தில், சைனியின் திறமையை பார்த்து காம்பீர் அவருக்கு பெரிய அளவில் உதவி  செய்துள்ளார்.



    காம்பீர் குறித்து சைனில் சைனி கூறுகையில் ‘‘கவுதம் காம்பிர் என்னிடம், டென்னிஸ் பந்தில் எப்படி பந்து வீசுவாயோ, அதேபோல் பந்து வீசவும். அப்படி வீசினால் சரியான இடத்தில் பந்து விழும் என்றார். அவர் சொன்னதுபோல் நான் செய்தேன். தற்போது இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு அவர்தான் காரணம். எப்போதெல்லாம் கவுதம் காம்பிர் பற்றி நினைத்தாலும் நான் எமோசன் ஆகிவிடுவேன். அது ஏன் என்று தெரியவில்லை’’ என்றார்.

    இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் அடித்த கருண் நாயர், தற்போது முன்னேற்றம் அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். #INDvAFG
    இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயர். 26 வயதாகும் இவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மொகாலி டெஸ்டில் அறிமுகமானார். மொகாலி டெஸ்டில் நான்கு ரன்களும், அதன்பின் நடைபெற்ற மும்பை டெஸ்டில் 13 ரன்களும் அடித்தார். சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் 3-வது டெஸ்டிலேயே முச்சதம் அடித்து அசத்தினார். அத்துடன் 303 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சேவாக்குடன் முச்சதம் அடித்த வீரர் பட்டியலில் இடம்பிடித்தார்.

    அதன்பின் ஆஸ்திரேலியா தொடரின்போது பெங்களூரு டெஸ்டில் 26 ரன்களும், ராஞ்சி டெஸ்டில் 23 ரன்களும், தரம்சாலா டெஸ்டில் 5 ரன்களும் மட்டுமே எடுத்தார். இதனால் இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கவில்லை.

    இந்தியா வருகிற 14-ந்தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்டில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வாய்ப்பு கெட்டியாக பிடித்துக் கொள்ள வீரும்பும் அவர், இரண்டு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது நான் முன்னேற்றம் அடைந்துள்ளேன் என்ற தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கருண் நாயர் கூறுகையில் ‘‘நான் தற்போது பிட்டராகியுள்ளேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அணியில் இடம்பெறவில்லை. இந்த நேரத்தில் அதிக சிரமம் எடுத்து என்னுடைய திறமையை வளர்த்துள்ளேன். பேட்டிங் மற்றும் பிட்னஸில் அதிக கவனம் செலுத்தினேன். உள்ளூர் தொடர்களில் அதிக ரன்கள் குவித்துள்ளேன். இரண்டு வருடத்திற்கு முன் நான் இருந்ததை விட தற்போது நான் முன்னேற்றம் அடைந்துள்ளேன்’’ என்றார்.
    இந்தியா - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு சவாலான ஆடுகளம் தயார் செய்யப்படும் என ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். #INDvAFG
    சர்வதேச கிரிக்கெட் வாரியம் கடந்த வருடம் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. ஆப்கான் கிரிக்கெட்டிற்கு உதவிகள் செய்து வரும் இந்தியாவிற்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டில் விளையாட அந்த அணி விரும்பியது. இதற்கு இந்தியாவும் சம்மதம் தெரிவித்தது.

    அதன்படி இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் வருகிற 14-ந்தேதி நடக்கிறது. இந்த டெஸ்டிற்காக சின்னசாமி மைதானத்தில் பிட்ச் தயார் செய்யும் வேலை நடைபெற்று வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் பிட்ச் பராமரிப்பாளர் இரவு பகலாக தயார் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இரண்டு அணிகளிலும் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் ஆடுகளம் யாருக்கு சாதகமான வகையில் தயாரிக்கப்படும் என்று விவாதம் தொடங்கியுள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் போன்றோர் அச்சுறுத்தலாக இருப்பார்கள்.

    இந்நிலையில் ஆடுகளம் ஐந்து நாட்கள் போட்டி நடைபெறும் வகையில் சவாலானதாக இருக்கும் என கர்நாடக கிரிக்கெட் சங்க ஆடுகளம் பராபரிப்பாளர் கே ஸ்ரீராம் கூறியுள்ளார்.



    இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்டிற்காக தயார் செய்யப்படும் ஆடுகளம் சிறந்ததாக இருக்கும். நாங்கள் இந்தியாவிற்காகவோ, ஆப்கானிஸ்தானிற்காகவோ ஆடுகளம் தயார் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால், சிறந்த கிரிக்கெட் ஆட்டமாக இருக்கும்.

    ஆடுகளத்தில் சற்று புற்கள் இருக்கும். நாட்கள் ஆகஆக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறும். ஆட்டம் ஐந்து நாட்கள் நடைபெறும் வகையில் ஆடுகளம் இருக்கும். மழை அவ்வப்போது குறுக்கீடு செய்கிறது. அதை சமாளித்து தயார் செய்து வருகிறோம். எந்தவித நெறுடலும் இல்லாமல் ஆடுகளம் தயார் செய்து கொடுக்கப்படும்.
    சுழற்பந்து வீச்சில் இந்தியாவை விட நாங்கள் சிறந்தவர்கள் என்று ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் தெரிவித்துள்ளார். #INDvAFG
    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் அந்தஸ்து பெற்றதுடன், வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியாவை சந்திக்கிறது. இந்த போட்டி வருகிற 14-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.

    நம்பர் ஒன் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறோம் என்ற அச்சம் துளியளவு கூட ஆப்கானிஸ்தான் வீரர்களிடம் இல்லை. மேலும், சுழற்பந்து வீச்சில் இந்தியாவை விட நாங்கள் சிறந்தவர்கள் என்று அந்த அணியின் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய் கூறுகையில் ‘‘நாங்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், மொகமது நபி, ரஹ்மத் ஷா, ஜகிர் கான் போன்ற தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளோம் என்பதை உலகமே அறியும். இவர்களை பின்பற்றி ஏராளமான சுழற்பந்து வீச்சாளர்கள் உருவாகி வருகிறார்கள். இது சிறப்பான விஷயம். என்னுடைய கருத்தின்படி, இந்தியாவை விட நாங்கள் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை வைத்துள்ளோம்.



    அயர்லாந்து தனது முதல் டெஸ்டில் பாகிஸ்தானை எதிர்த்து சொந்த மண்ணில் விளையாடியது. இதனால் அவர்களால் நெருக்கடி கொடுக்க முடிந்தது. நாங்கள் இந்தியாவில் விளையாட இருக்கிறோம். இங்கு சுழற்பந்து வீச்சு சிறப்பானதாக இருக்கும். நாங்கள் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுப்போம். அதேபோல் எங்களுக்கும் நெருக்கடி இருக்கும். இந்தியாவிற்கு எதிரான போட்டி சிறந்ததாக இருக்கும்’’ என்றார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்பது குறித்து கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ள விக்கெட் கீப்பர் சகாவிற்கே நம்பிக்கை இல்லை. #INDvAFG
    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த வருடம் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்து பெற்றது. அந்த அணி வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டை இந்தியாவிற்கு எதிராக விளையாடுகிறது. இந்த டெஸ்ட் வருகிற 14-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது.

    இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சகா இடம்பிடித்திருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2-ல் விளையாடியபோது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் வலது கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதனால் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இன்னும் இருந்து வருகிறது.



    இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் பங்கேற்பது குறித்து சகாவிற்கு முழு நம்பிக்கை இல்லை. இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘பிசிசிஐ என்னுடைய காயம் குறித்து ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து வருகிறது. இறுதியான முடிவு அவர்கள் கையில்தான் உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான் ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்கு தயாராகுவேனா என்பது தெரியவில்லை. அது என்னுடைய கையில் இல்லை.

    தற்போது சகாவின் காயம் குறித்து அறிய பிசிசிஐ எக்ஸ்-ரே அறிக்கைக்காக காத்திருக்கிறது. அந்த அறிக்கைக்குப் பிறகுதான் அவருக்கு அறுவை சிகிச்சை தேவையா? என்பது தெரியவரும்.
    இந்தியாவிற்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் நான்கு ஸ்பின்னர்களுடன் களம் இறங்குகிறது ஆப்கானிஸ்தான். #INDvAFG
    ஐசிசி கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. அயர்லாந்து வரலாற்று சிறப்புமிக்க தனது முதல் டெஸ்டில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. ஆப்கானிஸ்தான் தனது முதல் டெஸ்டில் இந்தியாவை எதிர்த்து விளையாடுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஜூன் 14-ந்தேதி தொடங்குகிறது.


    முஜீப் உர் ரஹ்மான்

    இதற்கான 16 கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிங்கர் ஸ்பின்னர்ஸ்களான முஜீப் உர் ரஹ்மான், அமிர் ஹாம்சா, ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ்களான ரஷித் கான், ஜாகிர் கான் ஆகிய நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.


    ஜாகீர் கான்

    16 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அஸ்கார் ஸ்டானிக்சாய் (கேப்டன்), 2. நஜீப் தராகாய், 3. உஸ்மான் கானி, 4. முகமது ஷேசாத், 5. முஜீப் உர் ரஹ்மான், 6. நஜிபுல்லா சத்ரான், 7. சமியுல்லா ஷென்வாரி, 8. ஷபிக்கியுல்லா, 9. தர்விஷ் ரசூலி, 10. முகமது நபி, 11. ரஷித் கான், 12. குல்பாதின் நைப், 13. கரிம் ஜனத், 14. ஷராபுதீன் அஷ்ரப், 15. ஷபூர் சத்ரான், 16. அஃப்டப் ஆலம்.

    ரஷித் கான் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்), முஜீப் உர் ரஹ்மான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) ஆகியோர் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஜாகிர் கான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடிதிருந்தார். ஆனால், கைவிரல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்.


    அமிர் ஹம்சா

    நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஆப்கானிஸ்தான் அணியில் ஜாகிர் கான் இடம்பிடித்திருந்தார். இதில் ஆப்கானிஸ்தான் அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது
    ×