search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் டெஸ்டில் பங்கேற்பது குறித்து சகாவிற்கே நம்பிக்கை இல்லை
    X

    ஆப்கானிஸ்தான் டெஸ்டில் பங்கேற்பது குறித்து சகாவிற்கே நம்பிக்கை இல்லை

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்பது குறித்து கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ள விக்கெட் கீப்பர் சகாவிற்கே நம்பிக்கை இல்லை. #INDvAFG
    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த வருடம் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்து பெற்றது. அந்த அணி வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டை இந்தியாவிற்கு எதிராக விளையாடுகிறது. இந்த டெஸ்ட் வருகிற 14-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது.

    இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சகா இடம்பிடித்திருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2-ல் விளையாடியபோது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் வலது கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதனால் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இன்னும் இருந்து வருகிறது.



    இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் பங்கேற்பது குறித்து சகாவிற்கு முழு நம்பிக்கை இல்லை. இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘பிசிசிஐ என்னுடைய காயம் குறித்து ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து வருகிறது. இறுதியான முடிவு அவர்கள் கையில்தான் உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான் ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்கு தயாராகுவேனா என்பது தெரியவில்லை. அது என்னுடைய கையில் இல்லை.

    தற்போது சகாவின் காயம் குறித்து அறிய பிசிசிஐ எக்ஸ்-ரே அறிக்கைக்காக காத்திருக்கிறது. அந்த அறிக்கைக்குப் பிறகுதான் அவருக்கு அறுவை சிகிச்சை தேவையா? என்பது தெரியவரும்.
    Next Story
    ×