search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvAFG"

    • பீல்டிங்கின் போது அவரின் வேலையை மட்டும் விராட் கோலி செய்யவில்லை. மற்றவர்களுக்கும் ஊக்கம் அளிக்கிறார்.
    • விராட் கோலி செய்யும் பீல்டிங்கில் பாதியை மற்ற வீரர்கள் செய்தாலே, இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும்.

    ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளரான டி திலீப் ஆப்கானிஸ்தான் தொடருக்கான சிறந்த இந்திய பீல்டரை அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் இருவரும் மிகச்சிறப்பாக பீல்டிங் செய்தனர். அதேபோல் இந்த தொடரில் பார்த்தோமென்றால் 2 பேர் தொடர்ந்து சீரான பீல்டிங்கை செய்து வந்துள்ளனர். அதில் ஒருவர் ரிங்கு சிங், மற்றொரு வீரர் விராட் கோலி.

    உலகக்கோப்பை தொடரின் 2 முறை சிறந்த பீல்டருக்கான விருதை விராட் கோலி வென்றார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது ஸ்லிப் திசையில் பீல்டிங் செய்ய வேண்டாம் என்று ஷார்ட் லெக் மற்றும் பைன் லெக் திசையில் பீல்டிங் செய்ய விருப்பம் தெரிவித்தார்.

    உலகக்கோப்பையில் சிறந்த பீல்டராக இருக்க வேண்டும் என்று சொல்லியதோடு, செய்து காட்டினார். பீல்டிங்கின் போது அவரின் வேலையை மட்டும் விராட் கோலி செய்யவில்லை. மற்றவர்களுக்கும் ஊக்கம் அளிக்கிறார். அவரை பார்த்து இளம் வீரர்களும் கற்று கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். விராட் கோலி செய்யும் பீல்டிங்கில் பாதியை மற்ற வீரர்கள் செய்தாலே, இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும்.

    என்று அவர் கூறினார். 

    • இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது டி20 ஆட்டம் நேற்று நடைபெற்றது.
    • இதில் முதல் சூப்பர் ஓவரிலும் ஆட்டம் சமனில் முடிந்ததால் 2-வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது.

    பெங்களூரு:

    இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது டி20 போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. பவர் பிளேயில் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து திணறியது. 22 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

    5வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி அணியை மீட்டது.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்களைக் குவித்தது. ரோகித் சர்மா 121 ரன்னும், ரிங்கு சிங் 69 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அதிரடி ஆடியது. முதல் 3 வீரர்களும் அரை சதம் கடந்தனர்.

    இதனால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    இதையடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் ஒரு விக்கெட்டுக்கு 15 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 1 ஓவரில் 15 ரன்கள் எடுத்ததால் முதல் சூப்பர் ஓவர் சமனில் முடிந்தது.

    இதனால், வெற்றியை தீர்மானிக்க 2-வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 2வது சூப்பர் ஓவரில் 11 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. எனவே ஆப்கானிஸ்தானை 2வது சூப்பர் ஓவரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தானை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கும், தொடர் நாயகன் விருது ஷிவம் துபேவுக்கும் அளிக்கப்பட்டது.

    2-வது சூப்பர் ஓவர் வரை வீசி கடைசி கட்டம் வரை பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவுக்கு கடும் சவால் அளித்த ஆப்கானிஸ்தான் அணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    சர்வதேச போட்டிகளில் 2 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் 121 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் குவித்தது.

    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி பவர் பிளேயில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரோகித் - ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 212 ரன்கள் குவித்தது. ரோகித் 121 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ரோகித் சதம் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 5 சதங்கள் விளாசி உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக சூர்யகுமார் யாதவ், மேக்ஸ்வெல் 4 சதங்கள் அடித்துள்ளனர்.

    இந்த போட்டியில் 46 ரன்கள் எடுத்த போது ரோகித் மேலும் ஒரு சாதனையை படைத்தார். இந்திய அணியின் கேப்டனாக அதிக ரன் குவித்த விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை ரோகித் (1572 ரன்கள்) பிடித்தியுள்ளார். விராட் கோலி கேப்டனாக 1570 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெய்ஸ்வால் 4 , விராட் கோலி 0, சிவம் துபே 1, சாம்சன் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
    • ரோகித் 120 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்களிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

    ஜெய்ஸ்வால் 4 , விராட் கோலி 0, சிவம் துபே 1, சாம்சன் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ரோகித் - ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதலில் பொறுமையாக விளையாடிய ரோகித் போக போக அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதிரடி காட்டிய ரோகித் 41 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

    தொடர்ந்து விளையாடிய ரோகித் சதமும் ரிங்கு சிங் அரை சதமும் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்தனர்.

    இறுதியில் இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. ரோகித் 120 ரன்களிலும் ரிங்கு சிங் 69 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரீத் அகமது மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

    முதல் ஓவரில் இந்தியா 11 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் பேடில் பட்டு 2 பவுண்டரி கிடைத்தது. இது நடுவரால் லெக் பைய்ஸ் கொடுக்கப்பட்டது. இதனால் முதல் ஓவர் முடியும் வரை ரோகித் 0 ரன்னில் இருந்தார். இதனையடுத்து 2-வது ஓவர் ஓமர்சாய் வீசினார். உடனே லெக் அம்பயராக இருந்த வீரேந்தர் சர்மாவிடம் இது குறித்து நக்கலாக ரோகித் பேசியது ஸ்டெம்ப் மைக்கில் தெளிவாக கேட்டது.

    அதில் ஏய் வீரேந்தர் முதல் பந்தை லெக் பைசாக கொடுத்தாயா? அந்த பந்து பேட்டில் உரசியது தெளிவாக தெரிந்தது. ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளேன் என சிரித்தப்படி கூறினார். நடுவரும் அதற்கு சிரித்தபடி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி பெங்களூருவில் தொடங்கியது.
    • இதில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    பெங்களூரு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    • இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது.
    • விராட் கோலி 14 மாத இடைவெளிக்கு பின் சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பிரம்மாண்ட மைல்கல் சாதனை ஒன்றை விராட் கோலி படைக்கவிருக்கிறார். 6 ரன் சேர்த்தால் அவர் அந்த மாபெரும் சாதனையை எட்டுவார்.

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான பேட்ஸ்மேனாக அறியப்படும் விராட் கோலி அவரைப் போல டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். ஆனால், டி20 போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அதிகம் ஆடாத நிலையில், கிரிக்கெட்டின் நவீன வடிவமான டி20யில் சச்சினுக்கு அடுத்த தலைமுறை வீரரான விராட் கோலி தன் முத்திரையை பதித்து இருக்கிறார்.

    அந்த வகையில் சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் ஐபிஎல் உள்ளிட்ட பிற உள்ளூர் டி20 போட்டிகளை சேர்த்து ஒட்டு மொத்த டி20 போட்டிகளில் விராட் கோலி இதுவரை 11994 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 6 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் 12000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

    மேலும், உலக அளவில் இந்த மைல்கல் சாதனையை செய்யும் நான்காவது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெறுவார். உலக அளவில் இதுவரை கிறிஸ் கெயில் (14562 ரன்கள்), சோயப் மாலிக் (12993 ரன்கள்), பொல்லார்ட் (12430 ரன்கள்) அடித்து முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்து விராட் கோலி 12000 டி20 ரன்கள் குவித்து நான்காம் இடத்தை பெறுவார். இந்த நால்வரில் விராட் கோலி தான் அதிக டி20 பேட்டிங் சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விராட் கோலி 14 மாத இடைவெளிக்கு பின் சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் டி20 போட்டி பெங்களூருவின் நாளை நடக்கிறது.
    • பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பெங்களூரு:

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மோதுகிறது. இதில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (17-ந் தேதி) நடக்கிறது.

    இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ரிஷப் பண்ட் இந்திய வீரர்களுடன் பேசி மகிழ்ந்தார். அவர் விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் ஆகியோருடன் சிரித்து பேசிக் கொண்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரிஷப் பண்ட் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓராண்டுக்கும் மேலாக விலகி உள்ளார். ஆனாலும் அவர் அடிக்கடி இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் மைதானத்திற்கு வந்து சக வீரர்களுடன் பேசி மகிழ்வார். அந்த வகையில் இப்போது இந்திய வீரர்களுடன் பேசி மகிழ்ந்துள்ளார். 

    • கேப்டன் ரோகித் சர்மா 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார்.
    • நாளைய போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    பெங்களூரு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மொகாலியில் நடந்த முதல் போட்டி மற்றும் இந்தூரில் நடந்த 2-போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (17-ந் தேதி) நடக்கிறது.

    இந்த ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது. தொடரை முழுமையாக ( ஒயிட்வாஷ்) கைப்பற்றும் வேட்கையில் உள்ளது.

    கடந்த 2 போட்டியிலும் இந்தியாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் ஷிவம் துபே, ஜெய்ஷ்வால் ஆகியோரும், பந்துவீச்சில் அக்ஷர் படேல், அர்ஷ்தீப்சிங் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    கேப்டன் ரோகித் சர்மா 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார். இதனால் இந்த போட்டியில் ரன்குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    நாளைய போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஜிதேஷ் சர்மா இடத்தில் சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவ், ஆவேஷ்கான் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும். முகேஷ்குமார், பிஷ்னோய் கழற்றி விடப்படலாம்.

    இப்ராகிம் சர்தான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும 7 முறை மோதிய போட்டியில் இந்தியா 6-ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ்-18 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • ரோகித் தனது 150 டி20 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி குல்படின் நைப்-ன் அதிரடி அரை சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - ஜெய்வால் களமிறங்கினர். ரோகித் தனது 150 டி20 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவர் முதல் போட்டியிலும் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜெய்ஸ்வால் - விராட் கோலி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். விராட் கோலி 29 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து களமிறங்கிய துபே ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினார். அதிரடியாக விளையாடி 2 பேரும் அரை சதம் அடித்தனர். ஜெய்ஸ்வால் 68 ரன்னிலும் ஜித்தேஷ் சர்மா 0 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில் இந்திய அணி 15.4 ஓவரில் 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. துபே 63 ரன்னிலும் ரிங்கு சிங் 9 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முஜீப் ரகுமான் 9 பந்துகளில் 21 ரன்களை குவித்து அதிரடி காட்டினார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. போட்டியில், கில், திலக் வர்மாவுக்கு பதில் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் அணியில் இடம் பிடித்தனர்.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    அதனால், ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக குல்பாடின் நைப் அரை சதம் அடித்து 57 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, நஜ்புள்ளா சத்ரான் 23 ரன்களும், கரிம் ஜனாட் 20 ரன்களும், குர்பாஜ் மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 14 ரன்களும், எடுத்தனர்.

    இறுதியில் முஜீப் ரகுமான் 9 பந்துகளில் 21 ரன்களை குவித்து அதிரடி காட்டினார்.

    முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவருக்கு அனைத்து விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது.

    இதன்மூலம், இந்திய அணி 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது.

    • முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இன்று நடைபெறும் போட்டியில் விளையாடுவதன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா புதிய உலக சாதனையை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 150 ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்று உள்ளார்.

    இதுவரை எந்த வீரரும் ரோகித் சர்மா அளவுக்கு அதிகமான போட்டிகளில் விளையாடியது கிடையாது. அவருக்கு அடுத்தபடியாக அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 134 போட்டிகளில் பங்கேற்று 2-வது இடத்தில் உள்ளார்.

    இந்திய அணியை பொருத்தளவில் ரோகித்திற்கு அடுத்த இடத்தில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உள்ளார். அவர் 115 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2-வது இடத்தில் உள்ளார். 

    ×