search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Afghanistan cricket team"

    ஆப்கானிஸ்தானில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் தனித்தனியாக கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.#AfghanistanCricketTeam #GulbadinNaib
    துபாய்:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தனித்தனியான கேப்டன்களை நியமிப்பது என்று முடிவு செய்து, கேப்டன்கள் விவரத்தையும் நேற்று வெளியிட்டது.

    கடந்த 4 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திய 31 வயதான அஸ்கார் ஆப்கான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஆப்கானிஸ்தான் ஒரு நாள் போட்டி அணிக்கு ஆல்-ரவுண்டர் குல்படின் நைப் கேப்டனாகவும், சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். குல்படின் நைப் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. டெஸ்ட் அணிக்கு ஆல்-ரவுண்டர் ரமத் ஷாவும், 20 ஓவர் போட்டி அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கானும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    உலக கோப்பை போட்டி நெருங்கி வரும் வேளையில் இந்த கேப்டன்ஷிப் மாற்றம் சரியான முடிவு அல்ல, இது பொறுப்பற்ற செயல் என்று அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான், முகமது நபி ஆகியோர் விமர்சித்துள்ளனர். #AfghanistanCricketTeam #GulbadinNaib

    ஆசிய கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் சவால் விடுத்த ஆப்கானிஸ்தான் அணியை பாராட்டியே ஆக வேண்டும். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய ஆறு அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. ஹாங் காங் அணி தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று முக்கிய தொடருக்கு வந்தது. மற்ற ஐந்து அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன.

    ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பிடித்திருந்தன.

    ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கும், ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, வங்காள தேசம் அணிகளும் முன்னேறும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    குறிப்பாக ஆப்கானிஸ்தான் விளையாடிய போட்டிகள் அனைத்து ‘ஒன் சைடு’ போட்டியாக இல்லை. இழுபறியாகவே சென்றது. லீக் சுற்றில் இலங்கை, வங்காள தேசத்தை துவம்சம் செய்து ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறியது.

    சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் சேர்த்தது. பின்னர் பாகிஸ்தான் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

    பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் சோயிப் மாலிக் நிலைத்து நின்று 43 பந்தில் 51 ரன்கள் அடிக்க 49.3 ஓவரில் இலக்கை எட்டி தப்பித்தோம் பிழைத்தோம் என பாகிஸ்தான் வெற்றி பெற்றது.



    2-வது ஆட்டத்தில் வங்காள தேசத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானுக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான்கு ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் மூன்று ரன்னில் தோல்வியை சந்தித்தது.



    நேற்று இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியை நோக்கிச் சென்றது.

    கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரஷித் கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் போட்டி ‘டை’ ஆனது. மற்ற அணிகள் மோதிய ஆட்டங்கள் பெரும்பாலும் ‘ஒன் சைடு’ ஆட்டமாகவே சென்றது. ஆனால், ஆப்கானிஸ்தான் அனைத்து போட்டிகளிலும் சடும சவால் கொடுத்தது. இதனால் அந்த அணிக்கு ஒரு சபாஷ் போடலாம்.
    பெங்களூருவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் விளையாடி வரும் நிலையில், இன்று ஆப்கன் வீரர்கள் பாரம்பரிய முறையில் ரம்ஜான் கொண்டாடினர். #INDvAFG #EidMubarak
    பெங்களூரு:

    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் ஆப்கானிஸ்தான் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோருடன் களம் இறங்கியது. முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் இந்திய அணி 474 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


    இந்நிலையில், ரம்ஜான் தினமான இன்று காலை போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி உட்பட அனைத்து வீரர்களும் பாரம்பரிய முறையில் ஆடை அணிந்து ரம்ஜானை கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்த புகைப்படங்களை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


    ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு பின்னர் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாட தயாராகினர். ஆப்கன் வீரர்கள் ரம்ஜான் கொண்டாடிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. #INDvAFG  #EidMubarak

    ×