search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bangladesh Cricket Team"

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதைத் தொடர்ந்து அந்த அணியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. #NewZealandMosqueAttack #BangladeshCricketTeam
    கிறிஸ்ட்சர்ச்:

    வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இரு அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

    இந்நிலையில், இன்று தொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மைதானத்தின் அருகே உள்ள மசூதிக்கு சென்றனர். அப்போது மசூதிக்குள் ஒரு மர்ம ஆசாமி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். உள்ளே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், கிரிக்கெட் வீரர்களை அதிகாரிகள் அவசரம் அவசரமாக வெளியே அழைத்து வந்தனர். வேகவேகமாக அருகில் இருந்த பூங்கா வழியாக சென்று, மைதானத்தை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து ஓட்டலுக்குச் சென்றனர்.

    வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அணியின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்தார். இருப்பினும், இந்த சம்பவத்தால் வீரர்கள் மனதளவில் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறினார். வீரர்கள் யாரும் ஓட்டலை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    மசூதிக்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே, நாளை நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்வதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து சுற்றுப்பயணமும் முடிவுக்கு வந்துள்ளது. #NewZealandMosqueAttack #BangladeshCricketTeam
    நியூசிலாந்தில் இன்று மசூதிக்குள் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #NewZealandShooting #BangladeshCricketTeam #NZMosqueShooting
    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, திடீரென துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம ஆசாமிகள், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். துப்பாக்கி சூடு நடந்த ஒரு மசூதிக்கு தொழுகை செய்வதற்காக வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் வந்தனர். அப்போது உள்ளே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், அவர்களை அதிகாரிகள் மற்றொரு வாசல் வழியாக வெளியே அழைத்து வந்தனர். பின்னர் வேகவேகமாக அருகில் இருந்த பூங்கா வழியாக சென்று, அவர்களின் பேருந்தில் ஏறினர். பின்னர் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், துப்பாக்கி சூடு சம்பவத்தை பார்த்ததால் அதிர்ச்சி அடைந்ததாகவும் அணியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.



    துப்பாக்கி சூடு சம்பத்தில் உயிர்தப்பியது பற்றி அணியின் பல்வேறு வீரர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். “துப்பாக்கியால் சுட்ட நபர்களிடம் இருந்து ஒட்டுமொத்த அணியும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது அச்சம் தரும் ஒரு அனுபவம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என துவக்க வீரர் தமிம் இக்பால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    “கடவுள்தான் இன்று எங்களைக் காப்பாற்றினார், நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இதுபோன்று மீண்டும் நடக்கக்கூடாது.. எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என மற்றொரு வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.  

    நியூசிலாந்து-வங்கதேச அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #NewZealandShooting #BangladeshCricketTeam #NZMosqueShooting

    ஆசிய கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் சவால் விடுத்த ஆப்கானிஸ்தான் அணியை பாராட்டியே ஆக வேண்டும். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய ஆறு அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. ஹாங் காங் அணி தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று முக்கிய தொடருக்கு வந்தது. மற்ற ஐந்து அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன.

    ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பிடித்திருந்தன.

    ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கும், ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, வங்காள தேசம் அணிகளும் முன்னேறும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    குறிப்பாக ஆப்கானிஸ்தான் விளையாடிய போட்டிகள் அனைத்து ‘ஒன் சைடு’ போட்டியாக இல்லை. இழுபறியாகவே சென்றது. லீக் சுற்றில் இலங்கை, வங்காள தேசத்தை துவம்சம் செய்து ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறியது.

    சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் சேர்த்தது. பின்னர் பாகிஸ்தான் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.

    பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் சோயிப் மாலிக் நிலைத்து நின்று 43 பந்தில் 51 ரன்கள் அடிக்க 49.3 ஓவரில் இலக்கை எட்டி தப்பித்தோம் பிழைத்தோம் என பாகிஸ்தான் வெற்றி பெற்றது.



    2-வது ஆட்டத்தில் வங்காள தேசத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தானுக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக நான்கு ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் மூன்று ரன்னில் தோல்வியை சந்தித்தது.



    நேற்று இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியை நோக்கிச் சென்றது.

    கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரஷித் கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் போட்டி ‘டை’ ஆனது. மற்ற அணிகள் மோதிய ஆட்டங்கள் பெரும்பாலும் ‘ஒன் சைடு’ ஆட்டமாகவே சென்றது. ஆனால், ஆப்கானிஸ்தான் அனைத்து போட்டிகளிலும் சடும சவால் கொடுத்தது. இதனால் அந்த அணிக்கு ஒரு சபாஷ் போடலாம்.
    ஆசிய கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் புதிய சாதனைப் படைத்துள்ளது. #AsiaCup2018 #BANvSL
    இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கியது.

    இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வங்காள தேசம் 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி புதிய சாதனை படைத்தது. வெளிநாட்டில் அந்த அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சாதனையை புரிந்துள்ளது.



    இதற்கு முன்பு புலவாயோ (ஜிம்பாப்வே) மைதானத்தில் 121 ரன் வித்தியாசத்தில வெற்றி பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது. இதை வங்காளதேசம் நேற்று துபாய் மைதானத்தில் முறியடித்தது.

    வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இது 6-வது மிகப்பெரிய வெற்றியாகும். அந்த அணி கடந்த ஜனவரி மாதம் டாக்காவில் இலங்கையை 163 ரன் வித்தியாசத்தில் வென்றதே சிறந்த வெற்றியாகும்.
    ×