search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mosque attack"

    நியூசிலாந்து நாட்டில் மசூதிகளில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று நடைபெற்ற ஜும்மா தொழுகையில் பிரதமர் ஜசிந்தா ஆர்ட்ரன் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். #mosqueattack #publicJummaprayer
    வெலிங்டன்:

    நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 8 இந்தியர்கள் உள்பட 50 பேர் பலியாகினர். 

    அமைதிப் பிரதேசமாக விளங்கும் நியூசிலாந்து நாட்டு மக்களை இந்த தாக்குதல் நிலைகுலைய வைத்தது.

    இந்நிலையில், இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்த மசூதிகளில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள நூர் மசூதி அருகேயுள்ள ‘ஹாக்லே பார்க்’ திறந்த வெளியில் இன்று வெள்ளிக்கிழமை (ஜும்மா) தொழுகை நடைபெற்றது.

    இந்த தொழுகையில் தலையில் முக்காடு அணிந்து நியூசிலாந்து பிரதமர்  ஜசிந்தா ஆர்ட்ரன் கலந்து கொண்டார். இதேபோல், மத வேறுபாடுகளை எல்லாம் கடந்து பல்வேறு துறை பிரபலங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான் பொதுமக்களும் பங்கேற்றனர்.

    சாலையோரங்களில் ‘ஒலு’ செய்வதற்காக ஏராளமான குழாய்களை கிறிஸ்ட்சர்ச் நகர மாநககராட்சி அமைத்திருந்தது. கடந்தவார தாக்குதலில் பலியானவர்களுக்கு மவுன அஞ்சலிக்கு பின்னர் நடைபெற்ற இன்றைய ஜும்மா தொழுகையில் சுமார் 20 ஆயிரம் மக்கள் பங்கேற்றதாக நியூசிலாந்து ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. #mosqueattack #publicJummaprayer
    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு பிரதமருக்கு நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். #MosqueShooting #NewZealandShooting #PMModi
    புதுடெல்லி:

    நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    இதையடுத்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தடுப்பு படை போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். நியூசிலாந்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசனும் உறுதி செய்துள்ளார்.

    இந்நிலையில், நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆடர்னுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் பலியானது அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளார். பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர், நியூசிலாந்துக்கு தேவைப்படும் உதவிகளை அளிக்க தயாராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளது. #MosqueShooting #NewZealandShooting #PMModi
    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதைத் தொடர்ந்து அந்த அணியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. #NewZealandMosqueAttack #BangladeshCricketTeam
    கிறிஸ்ட்சர்ச்:

    வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இரு அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

    இந்நிலையில், இன்று தொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மைதானத்தின் அருகே உள்ள மசூதிக்கு சென்றனர். அப்போது மசூதிக்குள் ஒரு மர்ம ஆசாமி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். உள்ளே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், கிரிக்கெட் வீரர்களை அதிகாரிகள் அவசரம் அவசரமாக வெளியே அழைத்து வந்தனர். வேகவேகமாக அருகில் இருந்த பூங்கா வழியாக சென்று, மைதானத்தை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து ஓட்டலுக்குச் சென்றனர்.

    வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அணியின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்தார். இருப்பினும், இந்த சம்பவத்தால் வீரர்கள் மனதளவில் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறினார். வீரர்கள் யாரும் ஓட்டலை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    மசூதிக்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே, நாளை நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்வதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து சுற்றுப்பயணமும் முடிவுக்கு வந்துள்ளது. #NewZealandMosqueAttack #BangladeshCricketTeam
    ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மசூதி மீது பயங்கரவாதிகள் இன்று ஜும்மா தொழுகையின்போது நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் - 20 பேர் உயிரிழந்தனர். #AfghanistanSuicideAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பக்கிட்டா மாகாணத்துக்கு உட்பட்ட கார்டெஸ் நகரில் உள்ள ஷியா மசூதி ஒன்றில் இன்று ஜும்மா (வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு) தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது.

    அப்போது உடலில் வெடிகுண்டுகளை கட்டிவந்த ஒரு பயங்கரவாதி அவற்றை வெடிக்க வைத்ததில் 20-க்கும் அதிகமானவர்கள் உடல் சிதறி உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    சுமார் 50 படுகாயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.


    சமீபகாலமாக அரசுப்படைகள், அரசு அலுவலகங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஐ.எஸ். மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திவரும் கொலைவெறி தாக்குதல்களில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #AfghanistanSuicideAttack
    ×