search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "writes letter"

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு பிரதமருக்கு நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். #MosqueShooting #NewZealandShooting #PMModi
    புதுடெல்லி:

    நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    இதையடுத்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தடுப்பு படை போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். நியூசிலாந்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசனும் உறுதி செய்துள்ளார்.

    இந்நிலையில், நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆடர்னுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் பலியானது அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளார். பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர், நியூசிலாந்துக்கு தேவைப்படும் உதவிகளை அளிக்க தயாராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளது. #MosqueShooting #NewZealandShooting #PMModi
    மேகதாதுவில் முதல்கட்ட ஆய்வு நடத்த அனுமதி அளித்த மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை திரும்ப பெறக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். #MekedatuDam #EdappadiPalaniswamy #PMModi
    சென்னை:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், மேகதாதுவில் அணை கட்ட தமிழக  அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இதற்கிடையே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முதல் கட்டமாக ஆய்வு நடத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.

    மத்திய அரசு ஆய்வு நடத்த ஒப்புதல் அளித்த நிலையில், இறுதி அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவதைத் தடுக்க தமிழக அரசு நீதிமன்றம் செல்லவுள்ளது.

    இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.



    அந்த கடிதத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முதல் கட்ட ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை காவிரி வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும்.

    மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள்  என அதில் தெரிவித்துள்ளார்.

    மேகதாதுவில் அணை கட்ட வழங்கப்படவுள்ள பூர்வாங்க அனுமதியை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர முடிவு செய்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. #MekedatuDam #EdappadiPalaniswamy #PMModi
    கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘கருணாநிதி எனக்கு தந்தை போன்றவர்’ என்று கூறி உள்ளார். #SoniaGandhi #Karunanidhi #Stalin
    சென்னை:

    கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவருடைய மகனும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    உங்களுடைய தந்தை கருணாநிதியின் மறைவு செய்தியை கேட்டு நான் மிகவும் துயரமடைந்தேன். அவர் உலக அரசியலில் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் ஒரு உயர்ந்த மனிதராக விளங்கினார். கருணாநிதி தன்னுடைய நீண்ட வாழ்க்கை பயணத்தில், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காகவும், தமிழகத்தின் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் வளம் ஆகியவற்றுக்காகவும் பாடுபட்டார்.

    மேலும் நாட்டின் மிக ஏழ்மையான மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடிமகனின் நலனுக்காகவும் ஓய்வின்றி உழைத்தவர். சிறந்த இலக்கியவாதியாக திகழ்ந்த கருணாநிதி தமிழ்நாட்டுக்காகவும், தமிழ் கலாசாரம் மற்றும் கலைக்காகவும் பெரும் பங்காற்றி உலக அரங்கில் ஒரு அங்கீகாரத்தை பெற்று கொடுத்துள்ளார்.

    கருணாநிதியின் தலைமையில் தமிழக அரசும், அரசியலும் சிறப்பாக இருந்தது. அதற்காகவே அவர் எப்போதும் போற்றப்படுபவராகவும், மதிக்கப்படுபவராகவும் இருக்கிறார். அவர் வழியில் நீங்கள் (மு.க.ஸ்டாலின்) பணியாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை அவருக்கு (கருணாநிதி) இருந்ததை நான் நம்புகிறேன். அவர் என்னிடம் எப்போதும் அன்பு, இரக்கம் மற்றும் சலுகை காட்டுபவராக இருந்தார். அவருடைய மறைவு தனிப்பட்ட முறையில் என்னால் தாங்கிக்கொள்ளமுடியாத இழப்பு.

    அவர் எனக்கு தந்தை போன்றவர். இந்த துயரமான நேரத்தில் என்னுடைய சிந்தனைகளும், பிரார்த்தனைகளும் உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்தினருக்காக இருக்கும். கருணாநிதி போன்ற ஒருவரை நாம் மீண்டும் பார்க்கப்போவது இல்லை. கருணாநிதியின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #SoniaGandhi #Karunanidhi #Stalin
    ×