search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாதுவில் அணை- மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை திரும்ப பெற கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
    X

    மேகதாதுவில் அணை- மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை திரும்ப பெற கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

    மேகதாதுவில் முதல்கட்ட ஆய்வு நடத்த அனுமதி அளித்த மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை திரும்ப பெறக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். #MekedatuDam #EdappadiPalaniswamy #PMModi
    சென்னை:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், மேகதாதுவில் அணை கட்ட தமிழக  அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இதற்கிடையே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முதல் கட்டமாக ஆய்வு நடத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.

    மத்திய அரசு ஆய்வு நடத்த ஒப்புதல் அளித்த நிலையில், இறுதி அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவதைத் தடுக்க தமிழக அரசு நீதிமன்றம் செல்லவுள்ளது.

    இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.



    அந்த கடிதத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முதல் கட்ட ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை காவிரி வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும்.

    மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள்  என அதில் தெரிவித்துள்ளார்.

    மேகதாதுவில் அணை கட்ட வழங்கப்படவுள்ள பூர்வாங்க அனுமதியை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர முடிவு செய்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. #MekedatuDam #EdappadiPalaniswamy #PMModi
    Next Story
    ×