என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » sri lanka cricket team
நீங்கள் தேடியது "Sri lanka Cricket Team"
ஆசிய கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் புதிய சாதனைப் படைத்துள்ளது. #AsiaCup2018 #BANvSL
இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கியது.
இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வங்காள தேசம் 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி புதிய சாதனை படைத்தது. வெளிநாட்டில் அந்த அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சாதனையை புரிந்துள்ளது.
இதற்கு முன்பு புலவாயோ (ஜிம்பாப்வே) மைதானத்தில் 121 ரன் வித்தியாசத்தில வெற்றி பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது. இதை வங்காளதேசம் நேற்று துபாய் மைதானத்தில் முறியடித்தது.
வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இது 6-வது மிகப்பெரிய வெற்றியாகும். அந்த அணி கடந்த ஜனவரி மாதம் டாக்காவில் இலங்கையை 163 ரன் வித்தியாசத்தில் வென்றதே சிறந்த வெற்றியாகும்.
இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வங்காள தேசம் 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி புதிய சாதனை படைத்தது. வெளிநாட்டில் அந்த அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சாதனையை புரிந்துள்ளது.
இதற்கு முன்பு புலவாயோ (ஜிம்பாப்வே) மைதானத்தில் 121 ரன் வித்தியாசத்தில வெற்றி பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது. இதை வங்காளதேசம் நேற்று துபாய் மைதானத்தில் முறியடித்தது.
வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இது 6-வது மிகப்பெரிய வெற்றியாகும். அந்த அணி கடந்த ஜனவரி மாதம் டாக்காவில் இலங்கையை 163 ரன் வித்தியாசத்தில் வென்றதே சிறந்த வெற்றியாகும்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அளிக்கப்பட்ட ஆலோசகர் பதவி தனக்கு வேண்டாம் என அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மறுத்துள்ளார். #SriLankacricket #MahelaJayawardene #MuttiahMuralitharan #consultantrole
கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆட்டம் நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. இதையடுத்து அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை ஆலோசகர்களாக நியமிக்கலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. முரளிதரன், ஜெயவர்தனே, குமார் சங்கக்காரா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு கமிட்டி அமைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, இலங்கை கிரிக்கெட் அணி தேர்வுக்குழு முதலில் மகேலா ஜெயவர்தனேவை அணுகியது. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதைத்தொடர்ந்து முத்தையா முரளிதரனை அணுகியது. ஆனால் இதற்கு ஒத்துழைப்பு தர அவரும் மறுத்துவிட்டார்.
தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வரும் இலங்கை ஏற்கனவே கடந்த வாரம் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்த ஆலோசனைக் குழு முடிவு குறித்து முரளிதரன் கூறுகையில், ‘இந்த அழைப்பு நேர்மையற்றது, சூழ்ச்சி நிரம்பியது கிரிக்கெட் நிர்வாகம் கேவலமான ஒரு நிலையில் இருக்கும் போது எங்களைப் பயன்படுத்தப்பார்க்கிறது’, என கூறினார்.
இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில், ‘இந்த சிஸ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நேரத்தை வீணடிக்க வேண்டாம், எங்களைப் பயன்படுத்த வேண்டாம்” என கூறியுள்ளார். #SriLankacricket #MahelaJayawardene #MuttiahMuralitharan #consultantrole
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X