search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayasuriya"

    • 13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா மலையாள சினிமா படத்தில் நடிக்கிறார்
    • இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது

    மலையாள 'திகில்' படம் கத்தனார். இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா- பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கின்றனர்.காட்டு மந்திரவாதி வேடத்தில் ஜெய சூர்யாவும், பேய் வேடத்தில் அனுஷ்காவும் நடிக்கின்றனர்.

    இந்த படத்தை ரோஜின் தாமஸ் இயக்குகிறார். அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படம் ஆகும்.அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக நம்பப்படும் கேரளப் பாதிரியார் கடமட்டத்து கத்தனார் பற்றிய கதைகளை அடிப்படையாக கொண்டது.இந்த படத்திற்கு ராகுல் இசையமைக்கிறார். நவீன தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி இப்படம் தயாரிக்கப்படுகிறது.

    இந்நிலையில் நடிகரும் -திரைப்பட தயாரிப்பாளர்-நடன இயக்குனருமான பிரபுதேவா கத்தனார் - தி வைல்ட் சோர்சரர் நடிகர்களுடன் இணைந்து உள்ளார்.பிரபு தேவாவை முன்னணி நடிகர் ஜெயசூர்யா, தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் மற்றும் நிர்வாகத் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்கும் புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

    சந்தோஷ் சிவன் இயக்கிய உறுமி படத்திற்குப் பிறகு13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா மலையாள சினிமா படத்தில் நடிக்கிறார். இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

    • அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படமாக இது உருவாக உள்ளது
    • இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு ள்ளது.

    மலையாள 'திகில்' படம் கத்தனார். இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா- பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கின்றனர்.

    காட்டு மந்திரவாதி வேடத்தில் ஜெய சூர்யாவும், பேய் வேடத்தில் அனுஷ்காவும் நடிக்கின்றனர். இந்த கதாபாத்திரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

    மேலும் பேய் கதாப்பாத்திரத்தில் 'கள்ளியங்கட்டு நீலி' ஆக அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளன. சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், அனுஷ்கா இருக்கும் 'கத்தனார் - தி வைல்ட் சோர்சரர்' படத்தின் வசீகரிக்கும் மோஷன் போஸ்டரை ஜெயசூர்யா பகிர்ந்துள்ளார். அதில் இந்த படத்தில் நடிக்கும் அனுஷ்காவை வரவேற்கிறேன் எனக் கூறி உள்ளார்.




     


    இந்த படத்தை ரோஜின் தாமஸ் இயக்குகிறார்.அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படமாக இது உருவாக உள்ளது.மேலும் இந்த படத்திற்கு ராகுல் இசையமைக்கிறார். நவீன தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி இப்படம் தயாரிக்கப்படுகிறது.

    இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு ள்ளது.

    • ஷாகின் அப்ரிடிக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை ரோகித் படைத்தார்.
    • ஆசிய கோப்பையில் 23 சிக்சர் அடித்த ஜெயசூர்யாவின் சாதனையை ரோகித் முறியடித்தார்.

    கொழும்பு:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன.

    இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடினார். இந்த ஜோடி 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ரோகித் சர்மா 56 ரன்களிலும், சுப்மன் கில் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    இந்திய அணி 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடிக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.

    மேலும் இந்த ஆட்டத்தில் அவர் 4 சிக்சர்கள் அடித்திருந்தார். அதன் மூலம் 50 ஓவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். ஆசிய கோப்பையில் 23 சிக்சர் அடித்த ஜெயசூர்யாவின் சாதனையை ரோகித் முறியடித்தார்.

    அதிக சிக்சர்கள் அடித்த முதல் 3 வீரர்கள் விவரம் பின்வருமாறு;-

    1. ஷாஹித் அப்ரிடி : 26 (21 இன்னிங்ஸ்) 1. ரோஹித் சர்மா : 26* (24 இன்னிங்ஸ்)

    2. சனாத் ஜெயசூர்யா : 23 (24 இன்னிங்ஸ்)

    3. சுரேஷ் ரெய்னா : 18 (13 இன்னிங்ஸ்)

    அத்துடன் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இலங்கை மண்ணில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற கிறிஸ் கெயில் படைத்திருந்த சாதனையையும் உடைத்து ரோகித் புதிய வரலாறு படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்: 1. ரோகித் சர்மா : 33*

    2. கிறிஸ் கெயில் : 30

    3. ஷாஹித் அப்ரிடி : 29

    4. சுரேஷ் ரெய்னா : 25

    ×